மிச்சமிருக்க 9 டீமும் உனக்காக போராடி தோத்தாகூட.. டேய் ஆர்சிபி நீ கப் அடிக்க முடியாது!
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்தாண்டாவது எப்படியும் கப் ஜெயிக்கலாம் என்ற கனவில் இருந்த ஆர்சிபி ரசிகர்கள், தங்களது நிலையை நினைத்து நொந்து போய் மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் போட்டிகளை ஒத்திவைக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. கிரிக்கெட் வீரர்களுக்கான பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இது நிச்சயம் வரவேற்கப்பட வேண்டிய முடிவுதான் என்றாலும், பிசிசிஐயின் இந்த முடிவால் ஆர்சிபி ரசிகர்கள்தான் அதிகம் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஏற்கனவே, இந்தாண்டு ஆர்சிபி கப்பை வெல்ல அதிக வாய்ப்பிருப்பதாக ஆரம்பம் முதலே சொல்லப்பட்டு வந்தது. அந்த அணியும் அதை உறுதி செய்வதுபோல், தொடர்ந்து நன்றாக விளையாடி வந்தது. இன்று அந்த அணியின் ஆட்டம் இருந்த நிலையில், அதிரடியாக ஐபிஎல் போட்டிகளை ஒத்தி வைத்து விட்டது பிசிசிஐ. பிறகென்ன, பிளே ஆஃப்புக்குள் போக முடியவில்லையே என ஏற்கனவே சோகத்தில் இருந்த சிஎஸ்கே ரசிகர்கள், இதை வைத்து ஆர்சிபிஐக் கலாய்ப்பதாக மீமர்கள் தங்கள் வேலையை ஆரம்பித்து விட்டனர்.
"நாங்க கப்பு ஜெயிக்கக்கூடாதுனு பிசிசிஐயே இப்டி பண்ணுதே.. என்ன கொடுமை சார் இது!" என்றும், "மிச்சமிருக்க 9 டீமும் உனக்காக போராடி தோத்தாகூட.. டேய் ஆர்சிபி நீ கப் அடிக்க மாட்ட.. உன் ராசி அப்டி!" என்றும் விதவிதமாக மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான ஐபிஎல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...






















Click it and Unblock the Notifications