நாங்க போகாத பிளே ஆஃப்புக்குள்ள எவனும் போகக்கூடாது.. அடுத்தாப்ல யாரை முடிச்சு விடலாம்?
சென்னை : தோற்றால்தான் கலாய்க்கிறார்கள் என்றால், இந்த முறை சிஎஸ்கே ஜெயித்துவிட்ட போதும், வேறு மாதிரி அதை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இந்தாண்டு ஐபிஎல் தொடரில் இனி சிஎஸ்கே ப்ளேஆஃப்புக்கு செல்வது நிச்சயம் இல்லையென்றாகி விட்டது, இனி வரும் ஆட்டங்களில் ஜெயித்தால் என்ன தோற்றால் என்ன என ஏற்கனவே ரசிகர்கள் ஆதங்கத்தில் இருந்த நிலையில், திடீரென வெற்றி பெற்று இன்ப அதிர்ச்சிக் கொடுத்துள்ளது சிஎஸ்கே. பிறகென்ன இந்த வெற்றியைக் கொண்டாடாமல் இருக்க முடியுமா? அதனால்தான் விதவிதமாக மீம்ஸ்களைப் பகிர்ந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர் சிஎஸ்கே ரசிகர்கள்.

"நாங்க போகாத பிளே ஆஃப்புக்குள்ள எவனும் போகக்கூடாது.. அடுத்தாப்ல யாருடா.. இப்ப வாங்கடா பார்க்கலாம்!" என்றும், "நல்லா போய்ட்டு இருந்துச்சு சார்.. நாங்க இல்லனா நீங்க கப் அடிங்கடா பங்காளினுட்டு வந்தானுங்க.. இப்ப அம்புட்டுத்தான்" என்றும் விதவிதமாக மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் நடைபெற நாடே உச்சகட்ட பதற்றத்தில் உள்ளது. இந்த சைடுகேப்பில், இந்த முறையாவது ஆர்சிபி கப்பை வெல்லும் என அதன் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சூழலில், இப்படியா ஒரு நிலை வர வேண்டும் என தங்களது நிலையை நினைத்து ஆர்சிபி ரசிகர்கள் நொந்து மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான ஐபிஎல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...




















Click it and Unblock the Notifications