மிச்சம் மீந்த பொங்கலையெல்லாம் வடகம் போடப் போறாங்களாம்.. உடனே இத நாம தடுத்தாகணும்!
சென்னை : பொங்கல் பண்டிகை முடிந்து ஒரு வாரம் ஆக உள்ள நிலையில், இன்னமும் பல வீடுகளில் பொங்கல் தீரவில்லை என்றும், அதை வைத்து வடகம் போட வீட்டில் இருப்பவர்கள் திட்டமிட்டு வருவதாகவும் மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
தீபாவளிக்குக்கூட பரவாயில்லை.. முறுக்கை வைத்துதான் டார்ச்சர் பண்ணுவார்கள் வீட்டில். அதை ஸ்நாக்ஸாக, சாப்பாட்டிற்கு தொட்டுக் கொள்ள சைடுடிஷ்ஷாக என ஒரு மாதத்திற்கு எங்கு பார்த்தால் முறுக்காகத் தெரியும்படி செய்து விடுவார்கள். ஆனால் பொங்கலோடு கம்பேர் பண்ணும்போது, முறுக்கைக்கூட சமாளித்து விடலாம் போல.
பொங்கல் பண்டிகையன்று பெரிய பானையில் பொங்கலை வைத்து விட்டு, வீட்டு சமையலறைக்கும் பல வீடுகளில் பொங்கல் விடுமுறை கொடுத்து விடுகின்றனர். அடுத்த சில நாட்களுக்கு பல வீடுகளில் மூன்று வேளையும் பொங்கல்தான் சாப்பாடு. மீந்து போன பொங்கலையும், சாம்பாரையும் சூடு பண்ணி, சூடு பண்ணியே பொங்கல் பண்டிகையை சமாளித்து விடுவதில் வல்லவர்கள் நம் பெண்கள்.
சரி ஒரு வழியாக பொங்கல் முடிந்து ஒரு வாரம் ஆகப் போகிறது.. இனியாவது வீட்டில் ஏதாவது புதிதாக சமைப்பார்கள் என எதிர்பார்த்தால், மீந்து போன பொங்கலை வடகமாக்கி, அதையும் சாப்பாட்டிற்கு தொட்டுக் கொள்ள வைக்க திட்டமிடுகிறார்களாம் பல வீடுகளில். அதனால்தான், 'என்னடா இந்த பொங்கல் எப்போதுதான் தீருமோ தெரியவில்லையே'.. என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நம் நெட்டிசன்கள்.
கூடவே, மாட்டுப் பொங்கலுக்கு பெண்கள் வாசலில் வரைந்த கோலங்களில் இருந்தும் இன்னமும் மக்கள் வெளியில் வரவில்லை போலும். சைடுகேப்பில் அதையும் கலாய்த்து மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...






















Click it and Unblock the Notifications