வந்துட்டன் சொல்லு திரும்ப வந்துட்டன் சொல்லு...!!
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஜாமீனில் விடுவிக்கப்பட்டதை வைத்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
சென்னை: தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவரை சிறையில் வைத்திருப்பதால் அரசுக்கு தேவையில்லாத செலவு ஆவதாக அரசு தரப்பில் கூறப்பட்டதால் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
சும்மாவே வைகோவை வச்சு செய்யும் நெட்டிசன்கள் அவர் வெளியே வருவதை மகிழ்ச்சியுடன் கலாய்த்துள்ளனர். வழக்கமாகவே வைகோவை சிங்கம், புலிக்குட்டி என ஓட்டும் நெட்டிசன்கள் அவர் வெளியே வருவதை வைத்து டைமிங் மீம்ஸ்களை வெளியிட்டுள்ளனர்.
வைகோவை வைத்தே இன்றை நாளை ஓட்டிவிடலாம் என நினைத்தனரோ என்னவோ அவர் குறித்த மீம்ஸ்கள் இணையதளங்களில் குவிந்து வருகின்றன. அவற்றில் சில..
|
தலைவா...
தலைவாஆஆஆஆஆஆஆஆ... என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார் இந்த நெட்டிசன்..
|
பொங்கி எழு குருநாதா
குருநாதா நீங்க இல்லாம நாட்ல அவனவனுக்கு துளிர்விட்டு போச்சு பொறுத்தது போதும் பொங்கி எழு குருநாதா... என கூறுகிறார் இந்த நெட்டிசன்...
ரஜினி எதிப்பார்கள் ஹேப்பி
வைகோ விடுதலை.. ரஜினி எதிர்ப்பாளர்கள் ஹேப்பி என்கிறது இந்த மீம்..
|
உள்ளேயே வெக்க முடியுங்களா
அவருக்கு ஆகற செலவு எவ்வளவு சொன்னீங்கன்னா ஆளுக்கு கொஞ்சம் போட்டு கட்டிறோமுங்க,உள்ளயே வெக்கமுடியுங்களா.. என கலாய்க்கிறார் இந்த நெட்டிசன்
|
கரையை கடக்க வாய்ப்புண்டு
சிறையை கடந்த புயல் ரஜினியை நோக்கி கரையை கடக்க வாய்ப்புண்டு.. என்கிறார் இந்த நெட்டிசன்..
|
வந்துட்டன்னு சொல்லு
வந்துட்டன் சொல்லு திரும்ப வந்துட்டன் சொல்லு....வைகோ டா.. என கலாய்க்கிறார் இந்த நெட்டிசன்