மார்ச் மாசமே இப்டி போட்டுத் தாக்குறியே.. மே மாசம்லாம் எங்களை என்ன பண்ணலாம்னு திட்டம் வச்சிருக்க?
சென்னை: நாளுக்கு நாள் வெப்பத்தின் அளவு அதிகரித்து வருவதை வைத்து மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
மழைக்காலம், பனிக்காலம் எல்லாம் முடிந்து கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வெயில் காலம் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்து விட்டது. இப்போதே பகல் நேரங்களில் குழாயைத் திறந்தால் சூடாக நீர் வர ஆரம்பித்து விட்டது. இன்னும் ஏப்ரல் மாதம்கூட வரவில்லை, ஆனால் அதற்குள் வெயில் இப்படி வாட்டி வதைக்கிறதே என மக்கள் வாய் விட்டு புலம்ப ஆரம்பித்து விட்டனர்.

இந்த புலம்பல்கள் மீம்ஸ்களாக சமூகவலைதளப் பக்கங்களிலும் எதிரொலிக்கிறது. இப்போதே இப்படி என்றால், ஏப்ரல், மே மாதங்களை நினைத்தாலே பயமாக இருக்கிறது என மீம்ஸ் போட்டு வெயில் பற்றிய பயத்தை மேலும் கூட்டி வருகின்றனர் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட வெயில் பற்றிய நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...























Click it and Unblock the Notifications