நல்ல வலுவான பேரா கேட்டாங்க.. ‘தோசைக்கல்’னு வைக்க சொல்லிட்டேன்!
சென்னை : சீரியலில் வரும் கதாநாயகி மாதிரி, காலையில் தலையில் துண்டு கட்டிக் கொண்டு பெட்காபி தருவார்கள் என எதிர்பார்த்து, ஏமாந்து போனதாக மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
சினிமாவைப் போலவே நம் வாழ்க்கையும் இருக்கும் என நம்பி ஏமாந்தது போன தலைமுறை என்றால், தற்போது சின்னத்திரையையும், சமூகவலைதளங்களையும் பார்த்து ஏமாந்து வருகிறது இந்தத் தலைமுறை என்றுதான் கூற வேண்டும். அதிலும் குறிப்பாக இந்த சீரியல்களில் வரும் கதாநாயகிகள், எப்போதும் முழு மேக்கப்புடன் வீட்டு வேலைகளையும் செய்து விட்டு, ரவுடிகளுடன் சண்டை போட்டு சமூகசேவையும் செய்து என, 'இப்படி ஒரு மனைவி/மருமகள் நமக்கும் கிடைக்க மாட்டாளா?’ என ஏங்க வைத்து விடுகிறார்கள்.

அதிலும் அதிகாலையில் அவர்கள் எழுந்து, தலையில் டவலுடன் பெட்காபி கொண்டு வந்து கணவர்களை எழுப்பும் காட்சியைப் பார்த்து சொந்த வாழ்க்கையில் ஏமாந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் போல.. அதனால்தான், இப்படி ஒரு காட்சியை எதிர்பார்த்து திருமணம் செய்து கொண்டால், காலையில் நம்மைத்தான் எழுப்பி பால் வாங்கவே அனுப்புகிறார்கள் என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர்.
கூடவே, விதவிதமான சாப்பாட்டு மீம்ஸ்களோடு இணையத்தை கலகலக்க வைத்து வருகின்றனர் நம் நெட்டிசன்கள். இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...




















Click it and Unblock the Notifications