பெண்களை போலீஸ் அடிக்கலை.. போலீஸைத்தான் பெண்கள் அடித்தார்கள்!
சாமளாபுரம் போலீஸ் தடியடி, டாஸ்மாக் போராட்டங்கள் குறித்து முதல்வர் அளித்துள்ள பதில்களை வைத்து சில மீம்ஸ் உங்களுக்காக.
சென்னை : தமிழக சட்டசபையில் முதல்வர் பழனிசாமி சாமளாபுரத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது பெண்ணை தாக்கிய போலீஸ் குறித்தும், டாஸ்மாக் போராட்டக்காரர்கள் பேஷனுக்காக போராடுவதாகச் சொன்னதை வைத்து சில மீம்ஸ்.
தமிழகத்தில் முழு வறட்சியில்லை என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது. ஆனால் இதே அரசு தான் தண்ணீர் பிரச்னை, விவசாயிகளின் பிரச்னையின் போது தமிழகத்தில் 140 ஆண்டுகளில் இல்லாத வறட்சி என்று அறிவித்து சலுகைகளையும் அறிவித்தது. அப்படியானால் இவர்களின் மன ஓட்டம் என்ன என்பதை வைத்து கற்பனை செய்த போது கேட்ட மைன்ட் வாய்ஸ் இது அது போன மாசம், நான் சொல்றது இந்த மாசம்.
இலங்கையில் புதிய சட்டம் தமிழக மீனவர்களை பாதிக்கும் என்பதால் இதன் மீது நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளர். பிரதமர் 3
நாள் இஸ்ரேல் பயணம் முடித்து, ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜெர்மனி சென்றுள்ளார். அப்போ முதல்வர் எந்த நாட்டு அட்ரஸுக்கு லெட்டர் போட்டிருப்பாரு?
திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் நடுரோட்டில் வைத்து டாஸ்டாக்கிற்கு எதிராகப் போராடியவர்களை போலீசார் வெளுத்து வாங்கினர். அதிலும் ஈஸ்வரி என்ற பெண்ணை ஆண் போலீஸ் கன்னத்தில் பளாரென விட்ட அறை மீடியா செய்திகளில் பரபரத்தன. ஆனால் பெண்களை போலீஸ் அடிக்கலை...போலீஸைத்தான்பெண்கள் அடித்தார்கள் என்ற ரீதியில் சட்டசபையில் பேசியுள்ளார் முதல்வர் பழனிசாமி
டாஸ்மாக்கிற்கு எதிராகப் போராடுபவர்கள் ஃபேஷனுக்காக போராடுகிறார்கள் என்று சொல்கிறாரே முதல்வர் பழனிசாமி அப்படியானால் அவர் ஃபேஷன்டெக்னாலஜிலாம் படிச்சிருப்போரோ!
















Click it and Unblock the Notifications