உன்னோட கடனை அடச்சுட்ட.. உன் குடும்பத்து கடனை யார் அடைப்பா.. விளம்பரப் பிரியர்களை வெளுக்கும் மீம்ஸ்!
சென்னை: தமிழக சட்டசபைக் கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது மற்றும் திமுக ஆட்சியில் வாங்கப்பட்ட கடன் தொடர்பான விவகாரங்கள் சாமானிய மக்களிடையே பேசுபொருளாக இருக்கிறது. இதனை வைத்து சோசியல் மீடியாவில் உருவாக்கப்பட்டுள்ள மீம்ஸை பார்க்கலாம்.
ஒரு படத்தில் கவுண்டமணியிடம் ஒருவர், இந்தா இதுக்கு முதல்ல ஈயம் பூசு.. இதை வச்சு நான் அடுத்த பொருளை கொடுக்கலாமானு யோசிக்கிறேன் என்பார். அதற்கு கவுண்டமணி, ஆமா இவரு பெரிய கலெக்டரு என்று வம்புக்கு இழுத்து அடிப்பார். அதில் வரும் மற்றொருவரை தன் பெயரில் அரசு வாங்கிய கடனை அடைத்த நபராக மாற்றி, கவர்மெண்ட் டோட்டல் கடன்ல இந்தா என் ஷேரு என்று கொடுப்பதாகவும், அதற்கு கவுண்டமணி, அப்ப உன் ஃபேமிலில மத்தவங்க கடன் ஷேரை யார் கட்டுவா? பக்கத்து வீட்டுக்காரனா.. என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் அட விளம்பர பைத்தியங்களா ரகம்.

பரிதாபங்கள் வீடியோ ஒன்றில் சுதாகர், "ஒரு சின்னப்பையன் எவ்வளவு அழகா இந்த விஷயத்தை செய்றான்.. நமக்கு மட்டும் ஏன் இப்படி.. முடிஞ்ச் போச்சு" என்று புலம்புவார். அதில் வரும் சுதாகரை திமுககாரராக மாற்றி, "அரசு எழுதி கொடுத்ததை எவ்வளவு அழகா ஆளுநர் படிக்கிறாரு.. நமக்கு மட்டும் பீகார்ல இருந்து ஒருத்தனை இறக்கி சட்டசபைய ஃபைட் கிளப்பா மாத்தி விட்டானுங்க" என்று புலம்புவதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் எல்லாம் எங்க நேரம்டா ரகம்.

ஆறு படத்தில் சூர்யா வில்லன் ஆஷிஷ் வித்யார்த்தியை பார்த்து, "யோவ் பேசுயா.. பேசு.. பேசி பேசி தான்டா ஆப்படிச்ச" என்று திட்டுவார். தமிழ்நாட்டில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துள்ள சூழலில், விஜய்யை வில்லனாகவும், சூர்யாவாக தவெகவினரையும் மாற்றி," யோவ்.. பேசுயா.. பேசு.. எப்போ தான்யா பேசுவ" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் மாட்டிக்கிட்டாரு ஒருத்தரு ரகம்.

திமிரு படத்தில் வடிவேலு அருகில் நின்று கூல்டிரிங்ஸ் குடிக்கும் சிங்கமுத்துவை பார்த்து, அட பிக்காலி பயலுகளா.. பொழப்பத்த புழுத்த பயலுகளா..என்று வம்புக்கு இழுப்பார். அதில் வரும் வடிவேலுவாக சாமானிய மக்களையும், சிங்கமுத்துவாக விஜய்யையும் மாற்றி, தினமும் ஒரு தவெக காரன் பாலியல் தொல்லை வழக்குல மாட்றான்.. இதுக்கு எதிர்ப்பு பண்ணி பேசுனா ஏன்டா ஒப்பாரி வைக்கிறீங்க கொத்துஸ்னு கேட்குறீங்க என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் பிரச்சனையை மட்டும் பேச மாட்றீங்களேடா ரகம்.

ரமணா படத்தில் நாயகியிடம் ஒரு கிழவி, நேற்று ஃபுல்லா அந்த சின்னப்பையன் ஒரே அழுகை.. அந்த வாத்தியாரு தான் தோள் மேல போட்டு தூங்க வச்சாப்ல என்பார். அதில் வரும் கிழவியாக சபாநாயகரை மாற்றி, உதயநிதி சட்டசபைக்கு வந்த வேகத்த பாத்துட்டு பயத்துல விஜய் தம்பி ஒரே அழுகை.. அப்றம் மூனு நாள் கேள்வி பதில் நேரம் இல்ல.. உங்க கிட்ட யாரும் பேச மாட்டாங்கனு சொன்னதுக்கு அப்றம் அழுகைய நிப்பாட்டினாப்ள என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஐயோ பாவம் ரகம்.













Click it and Unblock the Notifications