நீ எப்புடிடா சிக்காம இருக்க.. எல்லாரும் நாங்களாக முடியுமாடா!
சென்னை: விஜய் டிவியின் நீயா நானாவில் சமீபத்தில் ஒளிபரப்பான தெரு நாய் விவாதம் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி, ஏராளமான மீம்ஸ் மற்றும் ரியாக்ஷன்கள் பரவின. அதற்குப் பிறகு, பூனை ரசிகர்களும் களமிறங்கியிருக்கிறார்கள்.
தெரு நாய்கள் விவாதத்தை வைத்து சமூக வலைத்தளங்களில் "பூனைகள்" பேசுற மாதிரி நகைச்சுவை மீம்ஸ்கள் குவிந்து வரத் தொடங்கின. பல மீம்ஸ்களில் பூனைகள், "நாங்களும் வீட்டில் வளர்றோம். வெளியே போய் விஷ பூச்சி, எலி எதுவோ பிடிச்சு சாப்பிட்டு வீட்டுக்கு கொண்டுவருறோம். ஆனா எங்களை யாரும் தடுக்கணும் சொல்ல மாட்டாங்க, எங்க மேல பயம் என்று பேசுவது போல மீம்ஸ் உருவாக்கப்பட்டுள்ளன. சிலர் நாய்கள் விவாதத்துக்கு பதிலாக, "பூனை மீது யாராலும் கை வைக்க முடியாது" என்று பஞ்ச் வசனங்களுடன் மீம்ஸ்களை வெளியிட்டு மக்களை சிரிக்க வைக்கிறார்கள்.

இந்த மீம்ஸ்கள் பூனைகள் தங்கள் பக்கம் வாதாடும் போலவே ரசிகர்களுக்கு தோன்ற, சமூக வலைத்தளங்களில் கலகலப்பு அதிகரித்துள்ளது. மீம் க்ரியேட்டர்கள் இந்த பூனை கோணத்தை ரசித்து, "இப்படிப் பல விவாதங்களை எடுத்து வந்தால் நாங்களும் குஷியாக இருப்போம்" என்று நகைச்சுவையாக பதிவிட்டு வருகிறார்கள்.
மொத்தத்தில், தெரு நாய் விவாதம் ஒரு பக்கம் சமூக பிரச்சனையை சீரியஸாக எடுத்துக் கொண்டாலும், அதிலிருந்து கிளம்பிய பூனை மீம்ஸ்கள் சமூக வலைத்தளங்களை சிரிப்பால் நிரப்பி வைத்திருக்கின்றன.




















Click it and Unblock the Notifications