காச எப்போடா தருவ?.. என்னடா புது பழக்கம் திருப்பி கேக்குற!
சென்னை: இந்த பொருளாதார நெருக்கடியில் பலரும் தங்களது அன்றாட செலவுகளுக்கு கூட பணம் அதிகம் தேவைப்படும் என்பதற்கே அலைய வேண்டிய நிலையில் உள்ளனர். இப்படி இருக்கும் நிலையில் சிலர் தெரிந்தவர்களிடம், நெருங்கிய நண்பர்களிடம் நம்பிக்கையோடு உதவி கேட்கிறார்கள். அதுபோலவே சிலர் தங்களிடம் இருந்த பணத்திலிருந்து நண்பர்களுக்காக உதவிக்கரம் நீட்டுகிறார்கள். ஆனால், அதற்கான பதிலாக சில நேரங்களில் ஏமாற்றமே மிஞ்சுகிறது.
பணம் வாங்கிய நண்பர்கள் சிலர், 'நாளைக்கு தருகிறேன்' என்ற வாக்குறுதியில் தொடங்கி, பின்னர் அந்தக் காசை திரும்ப கேட்கும் நிலை வந்தால், 'நீ யாருனு கூட தெரியல' என்ற மனநிலையுடன் முகம் திருப்பி விடுகிறார்கள். இந்த மாதிரியான ஏமாற்றங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் ஏராளமான மீம்ஸ்களாக பரவிவருகின்றன.

நண்பர்கள் என்ற பெயரில் நடிப்பவர்கள், நெருக்கம் என்ற பெயரில் நம்பிக்கையை விற்றுவிடுகிறார்கள். நல்ல மனிதராக இருந்தவர்கள் கூட, பணம் தரும் அல்லது கேட்கும் சூழ்நிலையில் நட்பையும் நம்பிக்கையையும் இழந்து விடுகிறார்கள். மனதை காயப்படுத்தும் இந்த அனுபவங்களை, நகைச்சுவை வடிவில் மீம்ஸ்களாக கிரியேட் செய்து சமூக வலைதளங்களில் உலாவ விட்டுள்ளார்கள் நெட்டிசன்கள். தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆன சில மீம்ஸ்களை இந்த பதிவில் பார்க்கலாம்.




















Click it and Unblock the Notifications