இந்த வீட்ல பேய் இருக்கு.. அதுவும் ஒரு ஓரமா இருக்கட்டும் மாப்ள!
சென்னை: முன்பெல்லாம் பேய் படம் என்றாலே அது ஒரு தனி அனுபவம். அப்போ வந்த மனிதன், உருவம், யார், அம்மன், ஜெமின்கோட்டை போன்ற படங்கள் குழந்தைகளுக்கு உண்மையிலேயே பயத்தை ஏற்படுத்தின. படம் பார்த்துட்டு இரவில் விளக்கு அணைக்காமல் தூங்குவது, சின்ன சின்ன சத்தத்துக்கே நடுங்குவது அந்த காலத்தின் பொதுவான நினைவுகள்.
இப்போது பேய் படங்கள் பயமுறுத்துவதற்காக மட்டும் இல்லாமல் நகைச்சுவையோடும் கலந்திருக்கின்றன. காஞ்சனா, அரண்மனை, டிடி ரிட்டர்ன்ஸ் போன்ற படங்கள் பயம்காட்டினாலும் சிரிக்க வைக்கும் காட்சிகளால் குடும்பம் முழுக்க ரசிக்கக் கூடியதாக மாறின.

இன்றைய இயக்குநர்கள் பேய் கதைகளை பல கோணங்களில் முயற்சி செய்கிறார்கள். பழிவாங்கும் கதைகளுக்கு அப்பாற்பட்ட உணர்ச்சி நிறைந்த காட்சிகள், மர்மம் நிறைந்த சோதனைகள், குழந்தைகளுக்கே பொருந்தும் லைட் கதைகள் என பல்வேறு வடிவங்களில் உருவாக்குகின்றனர்.
தியேட்டரில் பேய் படம் பார்க்க மக்கள் விரும்புவது இன்னும் அந்த அச்சத்தை உணர்வதற்காகத்தான். ஆனால் போகப் போக பேய் படங்கள் முழுக்க காமெடியா அல்லது முழுக்க உணர்ச்சிமிக்க கதைகளாக மாறிவிட்டன.
90களில் பேய் படம் என்றாலே முழுக்க பயமுறுத்தும் கதைகள் என்றே கருதப்பட்டது. ஆனால் இன்று அது சிரிப்பும் கலந்த முழுமையான பொழுதுபோக்காக மாறி விட்டது. அதனால்தான் பேய் படங்களுக்கு இருக்கும் மவுசு ஒருபோதும் குறையவில்லை. எந்த பேய் படங்கள் வந்தாலும், சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆகும் மீம்ஸ்கள் அதற்கு சாட்சி.




















Click it and Unblock the Notifications