வெச்சது 2 கொழுக்கட்டை.. உனக்கு BMW கார் வேணுமோ!
விநாயகர் சதுர்த்தி வந்தாச்சுன்னா, வீட்ல மட்டும் இல்லாமல் தெரு முழுக்க பண்டிகை களம் மாதிரி இருக்கும். வீட்ல இளசுகள் எல்லாம் வாட்ஸாப் ஸ்டேட்டஸ்ல விநாயகர் பாடல்கள் ஸ்டேட்டஸ் போட்டுட்டு, பக்கத்துல கொழுக்கட்டைக்கு காத்துக்கிட்டு இருப்பாங்க.
திடீர்ன்னு தெருவிலிருந்து வரும் ஸ்பீக்கர் சத்தம் - *"கஜ முகானே..."*ன்னு ஒலிச்சு, மைல்ஸ் அண்ட் மைல்ஸ் கேக்கும். ஒவ்வொரு தெரு மூலையிலும் ஸ்டேஜ் கெடுத்து, பெரிய விநாயகர் சிலை வைச்சிருப்பாங்க. சிலையை வச்சது யாருன்னு தெரிஞ்சிக்கணும்னா பக்கத்துலயே சில இடங்களில் பேனர்களும் சேர்ந்தே இருக்கும். யாரு பெரிய ஸ்பீக்கர் பாக்ஸ் வைப்பாங்கன்ற போட்டி ஒரு பக்கம் இருக்கும். அந்த ஸ்பீக்கர் சத்தத்தால பக்கத்து தெருவில இருந்தாலும் தூங்க முடியாது. ஓய்வில்லாமல் சவுண்ட் பாக்ஸ் பாட அதே சமயம் பக்கத்துல ரீல்ஸ் காமெரா ரெடி, இன்ஸ்டாக்கு வைரல் பண்ண சவுண்ட் பார்ட்டிகள் எல்லாம் காத்திருக்கும்.

விநாயகர் சிலைகள் ட்ரெண்ட்க்கு ஏற்றவாறு பல வடிவங்களில், பல தெருக்களின் மூலைகளில் அலங்கரித்து நிற்பார். அதை பார்க்கவே பக்கத்துக்கு தெரு ஊர்க்களில் இருந்து மக்கள் வருவார்கள். ஸ்பீக்கர் சத்தம், சினிமா பாடல்கள், பஜனை, டான்ஸ் எல்லாம் கலந்து ஒரே இசை நிகழ்ச்சி மாதிரி இருக்கும். ஆனா இதை விநாயகர் கேட்டாரா? என்ற கேள்விகளோடு, சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் சுற்றி வருகின்றன.






















Click it and Unblock the Notifications