தமிழ்நாட்டுல தேசத் துரோகி எல்லாம் சர்வ சாதாரணமப்பா...!
தேசத் துரோக வழக்கில் வைகோ சிறையிலடைக்கப்பட்டதை வைத்து சமூக வலைதளங்களில் ஏராளமான மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன.
சென்னை மதிமுக பொதுச் செயலாளரான வைகோவுக்கு எழும்பூர் நீதிமன்றம் நேற்று 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்தது. இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
நீதிபதி ஜாமின் வழங்குவதாக கூறியும் அதனை ஏற்க மறுத்து வைகோ சிறை தண்டனை பெற்றுள்ளார். இதனை வச்சு செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்... அந்த கலாய் மீம்ஸ்களில் சில இதோ..
மதிமுகவின் தலைமையகம்
வைகோ தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பதால் அதுவே மதிமுகவின் தற்காலிக தலைமையகமாக இருக்கும் என சொல்கிறது இந்த மீம்.
சர்வ சாதாரணமப்பா..
தேசத் துரோக வழக்கில் வைகோவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்: தமிழ்நாட்டுல தேசத் துரோகி எல்லாம் சர்வ சாதாரணமப்பா...!! என்கிறது இந்த மீம்
மரத்தை வெட்டினது தேசத்துரோகமா?
தேசத் துரோக வழக்கில் வைகோவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்: ஐயா.. கருவேலம் மரத்தை வெட்டினது தேசத்துரோகமா ?? என கேட்கிறது இந்த மீம்
உள்ள பிடிச்சு போடுவீங்களா?
ஜட்ஜ் ஐய்யா நான் ஒன்னு கேக்குறேன் உங்கள.. தேசத்துக்கு துரோகம் பண்ற மாதிரி பேசுனதுக்கு உள்ள புடிச்சு போடுறீங்க.. அதே மாதிரி ஒருத்தர் ஒரு சில கட்சிகளுக்கும் கட்சி தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் துரோகம் செஞ்சு அந்த கட்சியையும் கட்சியோட தலைவரையும் ஒன்னுமில்லாம ஆக்கிட்டாரு.. அதுக்கு நீங்க அவர உள்ள பிடிச்சு போடுவீங்களா???
நானும் ஒரு தியாகிதான்!
நான் ஜெயிலுக்கு போறேன், ஜெயிலுக்கு போறேன், ஜட்ஜ் அய்யாவே ஜாமின் கொடுக்குறேன்னு சொல்லியும் நான் வேணாம்னு சொல்லிட்டேன்.. கேட்டுக்குங்க மக்களே நாட்டுக்காக போராடி உள்ள போன நானும் ஒரு தியாகிதான்!!!












Click it and Unblock the Notifications