அப்போ டிசம்பர் 31க்கு அப்புறம்... ‘கோவிந்தா, கோவிந்தா’ தான்!
சென்னை: மத்திய அரசின் திடீர் அறிவிப்பால் இரண்டு நாட்கள் பெரும் சிரமத்திற்கு ஆளான மக்கள், நேற்று வங்கி திறந்ததும் முதல்வேலையாக தங்களிடம் உள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் தீவிரம் காட்டினர்.
காலையிலேயே பேங்க் வாசலில் வரிசையில் தவமிருக்கத் தொடங்கினார். ஆனால், அடித்துப் பிடித்து உள்ளே போனதும், 'ஒரிஜினல் அடையாள அட்டையை காட்டினால் மட்டும் பத்தாது. ஜெராக்ஸ் காப்பி வேண்டும்' என வங்கி ஊழியர்கள் கேட்க, வாடிக்கையாளர்கள் அதிர்ந்து போனார்கள்.
இப்படியாக நேற்று வங்கிகளில் நடந்த அட்ராசிட்டிகள் குறித்த மீம்ஸ்கள் இவை...

காசு தான் இல்ல...
வங்கிகள் கேட்கும் ஆவணங்கள் எல்லாம் சரியாகத்தான் இருக்கின்றன. ஆனால், மாற்றுவதற்கு பணம் தான் இல்லை என்ற ஏழை மக்களின் ஆதங்கம் இது.

கோவிந்தா... கோவிந்தா
மத்திய அரசு அறிவித்துள்ளபடி டிசம்பர் 31க்குள் நம்மிடம் உள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளாவிட்டால், இது தான் முடிவு.

வேற நோட்டு வேணும்...
புதிய 2000 ரூபாய் நோட்டுகளை பிங்க் நிறத்தில் பார்த்து பலர் முகம் சுளித்து வருகின்றனர். சிலர் மொய்ப்பணக் கவர் மாதிரி இருக்கிறது என கிண்டல் செய்து வருகின்றனர்.

யாரிடம் கேட்கிறார் ஆதார்..
புதிய நோட்டுகளை மாற்றுவதற்கு வங்கிகள் ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களைக் கேட்கும் போது, சிலரின் மைண்ட் வாய்ஸ் இது.

500 வேணுமா... 2000 வேணுமா
பழைய நோட்டுகளைக் கொடுத்து விட்டு புதிய ரூபாய் நோட்டுகளைக் கேட்பவர்களிடம் வங்கி ஊழியர்கள் கேட்கும் கேள்வியாம் இது.

மணி.. மணி.. மணி
பழைய செல்லாத நோட்டுகளைக் கொடுத்து விட்டு, அதற்குப் பதில் புதிய நோட்டுகளைப் பெற்ற மக்களின் மனநிலை இப்படித்தான் உள்ளது.












Click it and Unblock the Notifications