நீட்: வலுவற்ற ஆளுங்கட்சி.. வக்கற்ற எதிர்க்கட்சி... நடுத்தெருவில் தமிழக மாணவர்கள்!!
நீட் தேர்வில் ஏகப்பட்ட கெடுபிடிகள் கடைபிடிக்கப்பட்டதால் அதை வைத்து சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் உலா வருகின்றன.
சென்னை: நீட் தேர்வில் ஏகப்பட்ட கெடுபிடிகள் கடைபிடிக்கப்பட்டதால் அதை வைத்து சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் உலா வருகின்றன.
நீட் தேர்வு நேற்று நாடெங்கும் 200 மையங்களில் நடைபெற்றது. தமிழகத்தில் 8 நகரங்களில் நடத்தப்பட்ட தேர்வை 88,000 பேர் எழுதினர். இதில் மாணவர்கள் அணிகலன்கள் அணியக் கூடாது, முழுக்கை சட்டை அணியக் கூடாது, துப்பட்டா, பர்தா போன்றவை அணியக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
இதற்கு பெற்றோர், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. நீட் தேர்வால் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்று கோரிக்கை முன்வைத்த நிலையில் இதுபோன்ற கெடுபிடிகளால் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் உள்ளதாக பெற்றோர் தெரிவித்தனர்.
|
குண்டு வைக்கறவனை விட்டுடுங்க...
பரீட்டை எழுதறவன் பேன்ட் , சட்டைய கிளட்டி சோதனை செய்யுங்க. ஆனால் குண்டு வெக்கறவன மட்டும் கோட்டை விட்டுடுங்க.
|
அதான் கழட்டுறாரு...
மோடி வந்தா எல்லாதயும் கழட்டிடுவாருன்னு சொன்னீங்கல்ல, அதான் கழட்டுறாரு.
|
நடுத்தெருவில் தமிழக மாணவர்கள்
வலுவற்ற ஆளுங்கட்சியும், வக்கற்ற எதிர்க்கட்சியும் உள்ளவரை தமிழக மாணவர்கள் நடுத்தெருவில் கோவனத்துடன் திரியும் நிலைதான் ஏற்படும்.
|
ஆடை சுதந்திரத்தில் ...
நாங்க டர்பனை கழட்ட சொன்னோமா.. நீங்க மட்டும் ஏன் எங்க ஆடை சுதந்திரத்தில் கை வைக்கிறீர்கள்.
|
இதுதான் டிரஸ் கோடு...
அடுத்த வருடம்... என்னயா இது?... தெரில...நீட் தேர்வுல டிரஸ் கோட்ல செம்ம கண்டீசனாம் அதான்
|
சமத்துவ புரட்சி...
கலெக்டர் பொண்ணு, டாக்டர் பொண்ணு, ஆட்டோ டிரைவர் பொண்ணு என எல்லோரும் ஒரே மாதிரியான நீட் தேர்வு எழுதின பெரிய சமத்துவ புரட்சி.
|
முழுக்கை சட்டை அணியக் கூடாது
நீட் தேர்வில் முழுக்கை சட்டை அணியக் கூடாது... பெற்றோர் தங்கள் பிள்ளையை நீட் தேர்வுக்கு அனுப்பியபோது...