தவிக்கும் மாணவர்கள்.. "மோடி உடனே செயல்படுங்கள்.." உக்ரைன் விவகாரம் தொடர்பாக டிரெண்ட்டாகும் மீம்ஸ்
டெல்லி: உக்ரைனில் உள்ள இந்தியர்களை பிரதமர் மோடி மீட்க வேண்டும் என சமூகவலைதளங்களில் ஒருமித்த குரல் எழுந்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போரிட்டு வருவதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. உக்ரைனில் உள்ளவர்கள் உயிரை காத்துக் கொள்ள பதுங்கு குழிகளில் தங்கியுள்ளார்கள்.
அங்குள்ள இந்தியர்கள் தாய்நாடு திரும்ப முடியாமல் பெரும் இன்னலுக்குள்ளாகியுள்ளார்கள். இதனால் இந்தியர்களை மீட்க உடனடி நடவடிக்கை தேவை என சமூக வலைதளங்களில் கோரிக்கை எழுகிறது.

பிரதமர் மோடி
இந்தியர்கள் போராடுவதை மோடி விரும்புகிறார். சாலைகளில் வாழ்க்கைக்காக போராடுவதையும் விரும்புகிறார்.

உக்ரைனில் சிக்கிய இந்தியர்கள்
உக்ரைனில் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் சிக்கியுள்ளார்கள். என்ன செய்வது என தெரியாமல் விழிக்கிறார்கள். உணவு, தண்ணீரின்றி தவித்து வருகிறார்கள்.
அவர்களை மீட்காமல் மோடி வித்தை செய்து வருகிறார். அது யாருக்கும் பயனில்லை. பிரதமர் மோடி உடனடியாக செயலாற்ற வேண்டும் என கூறும் இந்த வலைஞர், ஒரு ஸ்டேடியத்தில் 4 பேர் அமர்ந்திருப்பதை இந்தியர்கள் மீட்பு என்றும் ஒரு ஸ்டேடியம் முழுவதும் கூட்டம் நிரம்பி வழிவதை உக்ரைனில் சிக்கிய இந்திய மாணவர்கள் என்றும் காட்டியுள்ளார்.

உக்ரைனிலிருந்து மீட்பு
இந்தியர்களை உக்ரைனிலிருந்து மீட்க வேண்டிய தருணம் இது. இதை பிரதமர் நரேந்திர மோடி நினைவில் கொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு தேவையற்ற விளம்பரங்களில் அவர் இறங்கக் கூடாது என்கிறார் இந்த வலைஞர்.

பப்ளிசிட்டி
கிட்டதட்ட எல்லா நாடுகளும் உக்ரைனிலிருந்து தங்கள் குடிமக்களை மீட்டுவிட்ட நிலையில் பிரதமர் மோடியோ பப்ளிசிட்டி வேலைகளில் இறங்கி பிஸியாக உள்ளார் என காங்கிரஸ் விமர்சித்துள்ளது.












Click it and Unblock the Notifications