நம்ம ஆபிஸ் குடும்பம் மாதிரிதான்.. அதுக்காக ‘அன்புள்ள மாமா’னு எழுதி லீவு கேட்ககூடாது!
சென்னை : ஞாயிற்றுக்கிழமை இரவென்றாலே திங்கள் மீண்டும் வேலைக்குச் செல்ல வேண்டுமே என்ற பயம் நம் நெட்டிசன்கள் மனதில் வந்து ஒட்டிக் கொள்கிறது போல.. அதனால்தான், 'ஞாயிறு இரவென்றால் பயம் எனக்கு.. திங்கள் என்றால் பயம் எனக்கு.. ஆபிசுக்கு செல்ல வேண்டும் என்றால் பயம் எனக்கு' என தெனாலி ரேஞ்சுக்கு மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர்.
பள்ளிக் குழந்தைகளைவிட மோசம் இந்த ஆபிசுக்குச் செல்பவர்கள். அவர்கள்கூட சனி, ஞாயிறு முடிந்து மீண்டும் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்றால் இந்த அளவிற்கு வருத்தப்பட மாட்டார்கள். ஆனால் இந்த வேலைக்குச் செல்பவர்கள் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமையை மீம்ஸ் போட்டு புலம்பித்தான் ஆரம்பிக்கிறார்கள். அதனால்தான் ஞாயிறுகளில் சாப்பாட்டு வாசத்தால் கமகமக்கும் சமூகவலைதளப் பக்கங்கள், அன்று இரவு முதலே திங்கட்கிழமை கவலைகளால் நிரம்பி வழியத் தொடங்கி விடுகிறது.
இப்போதும் அப்படித்தான் இன்னமும் ஞாயிற்றுக்கிழமையே முடியவில்லை, அதற்குள் திங்கட்கிழமையை நினைத்து மீம்ஸ் போட்டு புலம்ப ஆரம்பித்து விட்டார்கள். "சனிக்கிழமை ராத்திரில இருக்க ஆனந்தம்.. ஞாயிற்றுக்கிழமை ராத்திரில இருக்க மாட்டேங்குதே!" என்ற யதார்த்தமான மீம்ஸ்கள் ரசிக்கும்படி உள்ளன.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...




















Click it and Unblock the Notifications