அதெப்படி பங்கு.. நம்ம தூங்கினா மட்டும் பிச்சை எடுக்கிற மாதிரி கனவுதான் வருது!
சென்னை : மாதக்கடைசி என்றாலே மீம்ஸ் போட்டு தங்களது பணப் பிரச்சினைகளையும், மனப்பிரச்சினைகளையும் புலம்ப ஆரம்பித்து விடுகின்றனர் நம் நெட்டிசன்கள்.
என்னதான் சம்பளம் வாங்கியதும், அனைத்து கமிட்மெண்ட்களுக்கும் சரியாக இருந்தாலும், ஒவ்வொரு மாதக் கடைசியிலும் யாரிடம் கடன் வாங்கலாம் என்றுதான் மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதனாலேயே மீம்ஸ் போட்டு, 'இங்கு கஜானா காலி.. அந்தப் பக்கம் எப்படி' என ஜாடை மாடையாக கேட்கத் தொடங்கி விடுகின்றனர்.
இப்போதும் அப்படித்தான் 23 தேதி ஆகி விட்டதால், தங்களது பணக் கஷ்டத்தையும், கூடவே மனக்கஷ்டத்தையும் மீம்ஸ் போட்டு சமூகவலைதளப் பக்கங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர். "2000 ரூபா நோட்டுனு நினைச்சு ரோட்ல கிடந்த பாக்கு கவரை எடுத்தப்பதான்.. பேராசை பெருநஷ்டம்னு புரிஞ்சது!" என்றும், "மத்தவங்க கனவுல பார்த்த நம்பரை வச்சு கோடி கோடியா ஜெயிக்குறாங்க.. ஆனா அதெப்படி பங்கு.. நம்ம தூங்கினா மட்டும் பிச்சை எடுக்கிற மாதிரி கனவுதான் வருது!" என்றும் தங்கள் ஆதங்கங்களை மீம்ஸ்களாக பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...




















Click it and Unblock the Notifications