இருக்கிறதை வச்சுகிட்டு சந்தோசமா வாழணுமாம்.. இங்க இருக்கறது பூரா கடன்தான்.. பிறகெப்டி சந்தோசமா வாழுறது!
சென்னை : கையில் காசில்லை என்றால் நம் மக்களுக்கு பைத்தியம் பிடித்து விடுகிறது. அதனால்தான் தங்களது மன அழுத்தத்தை எல்லாம் மீம்ஸ் போட்டு குறைத்துக் கொள்கின்றனர்.
ஒவ்வொரு மாதமும் 20 தேதியாகி விட்டாலே, நம் மக்கள் வேறு ஒரு மோடுக்கு மாறி விடுவார்கள். கையில் காசில்லை.. நைட்டு தூங்க முடியலை.. என விதவிதமாக மீம்ஸ் போட்டு புலம்ப ஆரம்பித்து விடுவார்கள். அதிலும் அடுத்த மாதம் ஸ்கூலுக்கு பீஸ் கட்ட வேண்டும், நிறைய முகூர்த்தங்களுக்கு மொய் எழுத வேண்டும் என எக்ஸ்ட்ராவாக நிறைய கமிட்மெண்ட்கள் வேறு இருக்கிறது.
பிறகென்ன எக்ஸ்ட்ரா கமிட்மெண்ட்களைப் போலவே, எக்ஸ்ட்ரா புலம்பல்களும் மீம்ஸ்களில் அதிகமாக உள்ளன. "இருக்கிறதை வச்சுகிட்டு சந்தோசமா வாழணுமாம்.. இங்க இருக்கறது பூரா கடன்தான்.. பிறகெப்டி சந்தோசமா வாழுறது!" என்பதில் தொடங்கி, "பெரிய ஆசையெல்லாம் ஒண்ணும் இல்ல.. யாராவது நல்லா இருக்கியானு கேட்டா.. மனசார சூப்பரா இருக்கேன்னு சொல்லணும்.. அவ்ளோதான்" என யதார்த்தமான உண்மைகளை மீம்ஸ்களாக்கி இருப்பது ரசிக்கும்படி உள்ளன.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...





















Click it and Unblock the Notifications