அடேய் கொரோனா.. ராஜா மாதிரி கடைக்குள்ள வியாபாரம் பார்த்தேன்..இப்படி தெருத்தெருவா அலைய விட்டுட்டியேடா
சென்னை: கொரோனா வைரஸ் மற்றும் அதனால் தமிழகத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கு உத்தரவு குறித்து மீம்ஸ்கள் தெறிக்கின்றன.
தமிழகத்தில் கடந்த இரு வாரங்களாக தளர்வுகளற்ற ஊரடங்கு வரும் ஜூன் 7ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் காய்கறிகளை போல் மளிகை பொருட்களும் நடமாடும் வாகனங்களில் கொண்டு செல்ல அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அவற்றில் சிரிப்பை வரவழைக்கக் கூடிய மீம்ஸ்கள் வாசகர்களுக்காக:

கடைக்காரன்
சென்னையில் மாஸ்க் பரோட்டா அறிமுகம்
கடைக்காரன் சால்னா ஊத்துவானா, இல்ல சானிடைசர் ஊத்துவானா

ஒயின் ஷாப் லிஸ்ட்லயே இல்ல
அனைத்துக்கும் டோர் டெலிவரி
காய்கறி, மளிகை பொருட்கள் மட்டும் நடமாடும் வாகனங்கள் மூலம் அனுமதி
ஒயின் ஷாப் லிஸ்ட்ல இல்லாம போச்சே...

தேங்காய்
தமிழகத்தில் இன்று முதல் தளர்வுகளற்ற ஊரடங்கு மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் காய், பழங்களை போன்று மளிகை பொருட்களும் டோர் டெலிவரி செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கடலை மிட்டாய் 2 பாக்கெட், தேங்காய் பர்ஃபி 2 பாக்கெட், 10 பொறி உருண்டை, அப்பறம் 10 டாடா குளுகோ, இந்த வாரம் இது போதும் மத்தத அப்புறம் பாப்போம்..

ரூ 1550 தாங்க
தமிழகத்தில் காய்கனிகளை போல் இன்று முதல் மளிகை பொருட்களும் டோர் டெலிவரி..
இந்தாமா யார்மா வீட்ல
மளிகை எடுத்துட்டு வந்திருக்கோம், மளிகை சாமானுக்கு 100 டெலிவரி சார்ஜ் 500 டிப்ஸ் 50 மொத்தம் 1550 குடும்மா

பணம் நம்மதான் கொடுக்கணும்
தமிழகத்தில் காய்கனிகளை போல் இன்று முதல் மளிகை பொருட்களும் டோர் டெலிவரி..
இந்தாடி டோர் டெலிவரி பன்றாங்கன்னு உன் இஷ்டத்துக்கு ஆர்டர் பன்ன போற டெலிவரி மட்டும்தான் அவங்க தருவாங்க, பணத்த நாமதான் தரணும்.

அடேய் கொரோனா
நடமாடும் மளிகை கடைகள் துவக்கம், போன் செய்தால் டோர் டெலிவரி செய்ய அனுமதி
ராஜா மாதிரி கடைக்குள்ள உக்காந்து வியாபாரம் பார்த்துட்டு இருந்தேன்.. இப்படி என்னை தெருத்தெருவா அலைய விட்டிட்டியேடா












Click it and Unblock the Notifications