ஜனவரி டூ அக். தண்ணீரில்லாமல் தத்தளிக்கும்.. நவ. டூ டிசம்பர் தண்ணீரில்! #chennairains
சென்னையில் மழை குறித்தும் மழை நீர் வீணாவது குறித்தும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னை: மழை குறித்தும் மழை நீர் வீணாவது குறித்தும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னையிலும் வெளுத்து வாங்கி வருகிறது. பருவமழை தொடங்கிய ஒரு வாரத்திலேயே சென்னையில் இயல்பை விட 93 சதவீதம் அதிகமாக கொட்டித் தீர்த்துள்ளது.
இதனால் பல இடங்கள் வெள்ளக்காடானாது. ஆனால் நேற்றிரவு முதல் சென்னையில் மழை ஓய்ந்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் பெய்து வரும் மழை மற்றும் மழை நீர் வீணாவது குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். அவற்றில் சில..
|
நவ் ..வந்துட்டேன்
எத்திராஜ் கல்லூரி விடுதிக்குள் மழை நீர் புகுந்தது 700 மாணவிகள் அவதி..
சென்னை சமூக ஆர்வலர்ஸ் நவ் ..வந்துட்டேன்ன்ன் !!! என்று கலாய்க்கிறது இந்த மீம்
|
பழி தீர்க்கிறது மழை
மழை நீர் போகும் படுகையில் வீடு கட்டியவர்களை ஒவ்வொரு ஆண்டும் பழி தீர்க்கிறது
என் பாதையை ஆக்ரமித்தால்
உன் இருப்பிடத்திற்கு அழிவே
#சென்னைமழை என்கிறது இந்த டிவிட்
|
தண்ணி வசதி எப்படி?
வீடு பிடிச்சிருக்கா?
அட்வான்ஸ் குடு்க்குறீங்களா?
தண்ணி வசதி எப்படி?
வீட்டுக்குள்ளேயே வந்துரும்
#சென்னைமழை என கலாய்க்கிறது இந்த டிவிட்
|
#தண்ணீரில் தத்தளிக்கும்..
ஜனவரி_அக்டோபர்
#தண்ணீரில்லாமல் தத்தளிக்கும்.
நவம்பர்_டிசம்பர்
#தண்ணீரில் தத்தளிக்கும்
இதுவே சென்னையின் உண்மைக்கதை
#சென்னைமழை என கூறுகிறது இந்த டிவிட்..
|
நீங்கள் போக கூடாத திசை
#சென்னை வாசி நேயர்களே
மீண்டும் கன மழை உண்டு
நீங்கள் போக கூடாத திசை
#கிழக்கு,#மேற்க்கு,#தெற்கு,#வடக்கு என சினிமா காமெடியை வைத்து கலாய்க்கிறது இந்த டிவிட்..
|
வரும்ன்னு சொன்னீங்களாடா?
சென்னைல பிளாட் வாங்குனா
பக்கத்துல காலேஜ் வரும் பிளைட் வரும் ரயில் வரும்னு சொன்னீங்களே வீட்டுக்குள்ள தண்ணி வரும்ன்னு சொன்னீங்களாடா?? என கிண்டலடிக்கிறது இந்த டிவிட்..