டெங்கு பற்றி பேசுவாங்கனு பார்த்தா.. எங்கம்மா பேசுறாங்க.. #டாஸ்மாக் விலை உயர்வு
டாஸ்மாக் விலை உயர்த்தப்பட்டது குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சென்னை: டாஸ்மாக் விலை உயர்த்தப்பட்டது குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில்
தமிழகத்தில் மதுபானங்களின் விலையை உயர்த்தவும் அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது.
அதன்படி பீர் விலையில் ரூ.10, குவாட்டர் விலையில் ரூ.12 உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலை தடுப்பது குறித்து பேசாமல் டாஸ்மாக்
குறித்து அமைச்சரவையில் பேசியதாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
|
தீபாவளி பாண்டிசேரிலதான்
எப்டியும் தீபாவளிக்கு நம்ப குடிமகன்கள் குடிக்காம இருக்க மாட்டாங்கனு தெரிஞ்சே ஏத்திருக்காங்க...... நமக்கு இந்த தீபாவளி பாண்டிசேரிலதான் போல..
என்கிறார் இந்த நெட்டிசன்
|
நல்லா கள்ளா கட்டும்
அரசு ஊழியர்கள் சம்பளம், மதுபான விலை உயர்கிறது.. இந்த வருட #தீபாவளி நல்லா கள்ளா கட்டும்.. என்கிறார் இந்த வலைஞர்
|
அடுத்த வாரம் தீபாவளி
எப்படியும் தீபாவளினா 100 கோடி கலெக்ட் பண்ணும்.. இப்போ 150 கோடியாக்க பிளான் பண்ணிட்டாங்க #டாஸ்மாக் விலை உயர்வு # அடுத்த வாரம் தீபாவளி..
என்கிறது இந்த டிவிட்
|
சாதனைய முறியடிக்க தான்
அண்ணே .. போன வருஷ தீபாவளி சாதனைய முறியடிக்க தான்.. என்கிறார் இந்த நெட்டிசன்
|
தீபாவளி டார்கெட்டா
ஓ...... தீபாவளி டார்கெட்டா..... என கிண்டலடிக்கிறார் இந்த வலைஞர்
|
நேரம் பார்த்து ஏத்திருக்காங்க
சரியா தீபாவளி நேரம் பார்த்து ஏத்திருக்காங்க...வாட்டே கிரேட்.. என்கிறது இந்த டிவிட்
|
எங்கம்மா பேசுறாங்க
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வு: அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு
#டெங்கு பற்றி பேசுவாங்கனு பார்த்தா..எங்கம்மா பேசுறாங்க.. என கலாய்க்கிறார் இந்த வலைஞர்..












Click it and Unblock the Notifications