'அப்பாடா புரட்டாசி போயிடுச்சி.. எடுடா அந்த மஞ்சப்பைய.. மட்டன் வாங்க போகனும்'.. வைரல் மீம்ஸ்கள்
சென்னைL: தமிழகத்தில் ஒரு மாதத்திற்கு பிறகு இன்று தான் பலரது வீடுகளில் மீன்,கோழி, ஆட்டுக்கறி, இறால் வகைகள் என்டரியாகி உள்ளது. வியாழக்கிழமையுடன் புரட்டாசி முடிந்த நிலையில், இன்று ஐப்பசியின் முதல் ஞாயிறு என்பதால் தமிழகம் முழுவதும் இறைச்சி வியாபாரம் களை கட்டியுள்ளது.
பொதுவாகவே பலருக்கும் அசைவ உணவுகள் ரொம்பவே பிடிக்கும். இதில் வெள்ளிக்கிழமை அம்மனுக்கு உகந்த நாள் என்பதாலும், சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாள் என்பதாலும் பலரும் அந்த நாட்களில் அசைவம் சாப்பிடுவதை விரும்பமாட்டார்கள்.
இதேபோல் புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்ற காரணத்தால் அந்தமாதம் முழுவதுமே அசைவ உணவுகளை யாரும் விரும்ப மாட்டார்கள். இதனால் அந்த ஒரு மாதம் இறைச்சி வியாபாரம் மொத்தமாக சரிந்துவிடும்.

கறிக்கடைகளில் கூட்டம்
இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக புரட்டாசியை முன்னிட்டு யாரு அசைவ உணவு பக்கம் செல்லவில்லை. ஐப்பசி கடந்த வெள்ளிக்கிழமை பிறந்த நிலையில் இன்று ஐப்பசியின் முதல் ஞாயிறு என்பதால் பலரது வீடுகளில் மீன்,கோழி, ஆட்டுக்கறி, இறால் ஆகியவை என்ட்ரியாகி உள்ளது. இறைச்சி கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மீன் மற்றும் இறைச்சி வாங்குவதற்கு பொதுமக்கள் படையெடுத்தனர்.

மீன் விலை அதிகரிப்பு
புரட்டாசி மாதத்தில் 580 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒருகிலோ ஆட்டுக்கறி தற்போது 100 ரூபாய் அதிகரித்து 680 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ கறிக்கோழி 200 ரூபாய்க்கும் சென்னையில் விற்பனை செய்யப்படுகிறது. சிந்தாதிரி பேட்டை மீன் சந்தையை பொறுத்தவரை கடந்த மாதம் 400 ரூபாய்க்கு விலை போன வஞ்சிரம் மற்றும் கொடுவா மீன்கள் 500 ரூபாய்க்கும், சங்கரா 200 ரூபாய்க்கும், வவ்வால் மீன் 300 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.

போச்சம்பள்ளி சந்தை
புரட்டாசி மாதம் நிறைவடைந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி ஆட்டுச் சந்தையில் ஆடுகள் விற்பனை அமோக இருந்தது. ஒரு ஆட்டிற்கு சராசரியாக ரூ.500 வரை கூடுதல் விலை இப்போது கிடைத்துள்ளது. தீபாவளியை முன்னிட்டு பல ஆட்டு வியாபாரிகள் வாங்கி கொண்டு சென்றனர்.

வீடுகளில் என்ட்ரி
தமிழகத்தில் பலரும் ஒரு மாதத்திற்கு ஆட்டு கறி, கோழி கறி, மீன், முட்டை, இறால் என அசைவ விருந்தை இன்றுதான் சாப்பிடுகிறார்கள். இதனால் ஆனந்த கண்ணீருடன் பலரும் மீம்ஸ்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்கள். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு...
இந்நேரம் எல்லா வீட்லயும் பிரியாணி வெந்திருக்கும்ல...
— 😄சின்னகொம்பன்🐱 (@Princepoiya) October 20, 2019
புரட்டாசி முடிவு... pic.twitter.com/74VwedUDCL
வாடா வா புரட்டாசி விரதம் முடிஞ்சதா...! pic.twitter.com/efoiUkJqAF
— KuTTy ;-) (@PragaKutty_) October 20, 2019
புரட்டாசி முடிந்தது.... Officially and unofficially....
— சோலை ராஜா (@solai_ra_ja) October 20, 2019
சம்பவம் செய்றோம்.... பிரியாணி சாப்பிட போறேன்...... pic.twitter.com/R27ua53lg9
புரட்டாசி முடிச்சாச்சு 😀😀😀😀 pic.twitter.com/P3GWBZSXzo
— 🌺SivaSakthi 💘💘💘 (@prabhak48701508) October 19, 2019
அந்த மீன் குழம்பு ஊத்துங்க..
— கடைநிலை ஊழியன் (@Suyanalavaathi) October 19, 2019
புரட்டாசி விரதத்த முடிச்சிட்டோம் ல..😁 pic.twitter.com/RJldndUjvu
புரட்டாசி முடிஞ்சு கறி தண்ணி இல்லாம காஞ்சு போய் இருக்கேன் ஸ்லிம்மா அழகா இருக்கீங்கனு வாய் வியாக்கியானமா பேசுறா நீ 👊🤜😒#Bigil #ராத்திரில இந்த மாதிரி பேசுனா வாயிலே வெட்டுவேன் pic.twitter.com/H4bPBM8bQH
— 🇷 🇦 🇸 🇺B҉I҉G҉I҉L҉ (@Rasu4thalapathi) October 18, 2019
புரட்டாசி மாதம் முடிந்து விட்டது pic.twitter.com/NWxNOOQrAa
— இந்துசேனை (@HinduSenai) October 18, 2019
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications