டிசம்பர்னா டிசம்பர்தான்யா.. இந்த வாரம் புயலுக்கு லீவு.. அடுத்தவாரம் அரையாண்டு லீவு!
சென்னை : கடந்த சில நாட்களாக மழையில்லாமல் இருந்தநிலையில், திரும்பவும் கனமழை குறித்த எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் கொடுத்துள்ளதால், இம்முறையும் விடுமுறை விடப்படும் என்ற எதிர்பார்ப்புடன் மாணவர்கள் இருக்கிறார்கள் என மீம்ஸ் போட்டுக் கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
டிசம்பர் மாதம் என்றாலே நம் மாணவர்களுக்கு தனி குஷி வந்துவிடும். ஏனென்றால் அடிக்கடி மழையைக் காரணம் காட்டி விடுமுறை கிடைத்து விடும் என்பதுதான். கடந்தவாரம் கனமழையால் வடமாவட்டங்களைவிட, தென் மாவட்டங்களுக்கு அதிக விடுமுறை கிடைத்தது. அதுவும் அரையாண்டு தேர்வுகள் நடந்துவரும் நிலையில், இந்த தொடர் விடுமுறைகள் அவர்களை ரொம்பவே மகிழ்ச்சி அடையச் செய்தது.
தற்போதுதான் வெயில் மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்பிய நிலையில், தற்போது மீண்டும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வுமண்டலம், புயல் என அடுத்தடுத்து மழை பற்றிய செய்திகள் ஊடகங்களில் உலா வரத் தொடங்கி விட்டன. இந்தச் செய்திகளைப் பார்த்து மாணவர்கள் குஷியடைந்துள்ளனர் என்றுதான் கூற வேண்டும்.
அதனால்தான், "டிசம்பர்னா டிசம்பர்தான்.. போனவாரம் மழைக்கு லீவு.. இந்தவாரம் புயலுக்கு லீவு.. அடுத்தவாரம் அரையாண்டு லீவு!" என மாணவர்கள் மகிழ்ச்சியாக விடுமுறையை எதிர்பார்த்திருப்பதாக நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டுக் கலாய்த்து வருகின்றனர். டிசம்பர் ஸ்பெஷல் மீம்ஸ்களோடு, மழை, குளிர், புதிய காலெண்டர் பற்றிய மீம்ஸ்களும் இணையத்தைக் குளிர வைத்து வருகின்றன.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...






















Click it and Unblock the Notifications