ஜெ.பிரச்சார கூட்டத்திற்கு போனால் உயிர் பிழைப்பது எப்படி?.. நெட்டில் ஓட்டும் நெட்டிசன்கள்!
சென்னை: அக்னி வெயில் வறுத்தெடுக்க... லட்சக்கணக்கான மக்கள் வியர்வையில் குளிக்க... வெயிலில் வெந்து சாகும் மக்களுக்கு மத்தியில் பல ஏசிகள் நடுவே அமர்ந்து கொண்டு அதிமுக ஆட்சியில் வசந்தம் வீசுகிறது என்று கூலாக பேசுகிறார் ஜெயலலிதா.
ஜெயலலிதாவின் பேச்சை கேட்கும் மக்களுக்குத்தான் காதிலும், கண்களிலும் புகை வருகிறது. பணத்துக்கு ஆசைப்பட்டு சிக்கிட்டோம் என்ன பண்றது என்று சொல்வது அறியாது தவிக்கிறார்கள்.
வியர்வையில் குளிக்கும் கூட்டத்திற்கு நடுவே நேரலை செய்யும் தொலைக்காட்சி ஒன்று, அம்மா ஆட்சியைப் பற்றி நல்லவிதமாக நாலு வார்த்தை சொல்லுதாயி என்று மைக் நீட்ட, கேட்டுட்டீங்க சொல்றேன் என்று தன் பங்குங்கு பேசி வைக்கிறார்கள்.
இதில் உயிர்பலி வேறு நடக்க, ஜெயலலிதாவின் அடுத்தடுத்த கூட்டங்களில் எப்படி உயிர்வாழ்வது என்று கற்றுக்கொடுக்கிறார்கள் நெட்டிசன்கள்
வாங்க வாழலாம்
இக்காட்டான இடத்தில் சிக்கிக்கொண்டால் உயிர் தப்பிப்பது எப்படி என்று டிஸ்கவரி சேனலில் நிகழ்ச்சி செய்பவரை வைத்து ஜெயலலிதா கூட்டத்தில் பங்கேற்கும் மக்களுக்கு பாடம் நடத்துகிறார் ஒருவர்.
உயிர்வாழ்வதே அச்சம்தான்
ஜெயலலிதாவின் கூட்டத்துக்கு வந்தால் அதன் பின் வாழ முடியுமா என்பதே அச்சமாக இருக்கிறதே? என்று கேட்டுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
ராமதாஸ் கமெண்ட்
கொளுத்தும் வெயில் காரணமாக கோவை, ஈரோட்டில் ஜெயலலிதா பிரச்சாரம் ரத்தாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால், ஆட்சியே ரத்தாகப் போகும் நிலையில் கூட்டம் ரத்தானால் என்ன என்று கேட்கிறார்.
|
காணொலி பிரச்சாரம்
கடும் வெயிலில் மக்களை வறுத்தெடுப்பதற்கு பதிலாக ஜெயலலிதா காணொலி மூலம் பிரச்சாரம் செய்வதுதான் அவருக்கும் மக்களும் நல்லது என்கின்றனர் சிலர்.
|
தினமும் சாகுறாங்களே
பிரச்சாரம் என்ற பெயரில் தினமும் ஒருத்தரை கொல்வதற்கு பதிலாக காணொலியில் பிரச்சாரம் செய்யுங்கள் என்கிறார் ஒரு வலைஞர்.
சிக்கிட்டா சின்னாபின்னம்தான்
பணத்திற்கு ஆசைப்பட்டு சிக்கிட்டோம், எப்படி வெளியே செல்வது என்று தெரியாமல் தவிக்கும் மக்களுக்காக இந்த பதிவு.
|
ஜெ. பிரச்சாரம்
ஜெயலலிதாவின் பிரச்சாரத்தை இதை விட சிறப்பாக யாரும் கிண்டல் செய்ய முடியாது.