“ஞாயிற்றுக்கிழமை காலையில உப்புமாவா... நோ”.. மீம்ஸ்களில் கதறும் நெட்டிசன்கள்!
சென்னை: ஞாயிறு ஸ்பெஷலாக இந்த வாரமும் சாப்பாடு மீம்ஸ்களைப் பகிர்ந்து சமூகவலைதளப் பக்கங்களை கமகமக்க வைத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
ஞாயிற்றுக்கிழமைக்கென ஆயிரம் வேலைகள் இருந்தாலும், அடுத்த ஒரு வாரத்திற்கு பேட்டரியை, (அதாங்க நம்மை..) சார்ஜ் செய்து வைத்துக் கொள்வதற்கு, இன்று விதவிதமாக சாப்பிட்டே ஆக வேண்டும் என நினைப்பார்கள் நம் மக்கள். அதனால்தான் மற்ற நாட்களில் வேலைக்காக வேகவேகமாக காலையில் எழுந்தவர்கள், இன்று கறிக்கடைக்காக எழுந்திருக்கிறார்கள்.
காலையிலேயே கறிக்கடை வாசல்களில் நிற்பவர்களின் பின்னணியில், நேரம் கழித்து சென்றால் நல்ல கறி கிடைக்காது, காலையில் இட்லிக்கு கறிக்குழம்பு கிடைக்காது என இப்படி ஏகப்பட்ட காரணங்கள் இருக்கின்றன. என்னதான் இப்படி எல்லாம் ஞாயிறு அசைவம் சாப்பிடுவதற்கான நாள் என மக்கள் எதிர்பார்ப்போடு இருந்தாலும், சில வீடுகளில் வழக்கம்போல் இன்று காலையில் உப்புமா, மதியம் சாம்பார் என சொதப்பி விடுவார்கள்.
அப்படி காலையில் உப்புமா சாப்பிட்டவர்கள்தான் சமூகவலைதளங்களில், 'ஞாயிறு காலையில் உப்புமாவா... நோ...' என்றும், கூடவே, 'காலையில் உப்புமா.. மதியம் கறியா? இல்லை காய்கறியா? என தெரியவில்லையே' எனவும் மீம்ஸ்களில் புலம்பிக் கொண்டிருக்கின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான ஞாயிறு ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...



















Click it and Unblock the Notifications