நாற்பதும் நமதே.. தமிழிசை முழக்கம்.. நோட்டாவும் உமதே.. உள்ளே புகுந்து நெட்டிசன்கள் குழப்பம்!
நாற்பதும் நமதே என்று தமிழிசை சவுந்தராஜன் ட்வீட் செய்துள்ளார்.
சென்னை: நாற்பதும் நமதே என்று ஏகப்பட்ட குஷியில் தமிழிசை சவுந்தராஜன் ட்வீட் ஒன்றினை போட்டிருக்கிறார். அதற்கு "உங்களுக்கே நம்பற மாதிரி இருக்கா மேடம்?" என்பது உட்பட பல ஆதரவு, எதிர்ப்பு கமெண்ட்கள் மாறி மாறி குவிந்து வருகின்றன.
தமிழகத்தில் பாஜக மலர்ந்தே தீர வேண்டும் என்று முழங்கி வந்தார் தமிழிசை. ஆனால் அமித் ஷாவோ, ம்ஹும்.. மலர்ந்தே ஆக வேண்டும் என்று கண்டிப்பாக சொல்லிவிட்டார்.
அதனால் நேற்று ஒருவழியாக அதிமுகவுடன் துண்டுபோட்டு பேசி பாஜக 5 சீட் வாங்கிவிட்டது. மெகா கூட்டணி அமைந்துள்ளதால் கூட்டணி தலைவர்கள் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்.
|
நாற்பதும் நமதே
இதே பூரிப்பில் தமிழிசை சவுந்தராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் பியூஷ் கோயல் பதிவிட்ட ஒரு பதிவினை எடுத்து போட்டுள்ளார். அதில், "நாற்பதும் நமதே. #மீண்டும்மோடிவேண்டும்மோடி" என்று உள்ளது.
|
நோட்டா உமதே
ஒற்றைவரி ட்வீட் ஆனாலும் ஏகப்பட்ட கமெண்ட்கள் குவிந்து வருகின்றன. அதில் ஒருவர், "உங்க தகுதிக்கு மீறி 5 சீட்டு வாங்குன குஷியில் இருக்கிங்க போல? நோட்டா உமதே" என்று கமெண்ட் போட்டுள்ளார்.
சிறிது வாய்ப்பு
"இதை நீங்கள் தனித்து நின்று சொன்னால் நெகிழ்ச்சி அடைய சிறிது வாய்ப்புள்ளது. ஆனால் தற்போது....." என்று பாதியிலேயே வார்த்தையை நிறுத்தி உள்ளார்.
|
கமெண்ட்கள்
ஆனால் இன்னொருத்தரோ, "உங்களுக்கே நம்பற மாதிரி இருக்கா மேடம்" என்று கேள்வியே எழுப்பி உள்ளார். இந்த ட்வீட்டைவிட அதற்கு வரும் கமெண்ட்கள் வைரலாகி வருகின்றன.