தீபாவளிக்கு டிரஸ் எடுக்கலாம்னு பார்த்தா.. எல்லா கடையிலயும் சிசிடிவி வச்சிருக்காங்க!
தீபாவளி ஆடைகள் பற்றிய ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: தீபாவளிக்கு புத்தாடைகள் வாங்கலாம் என கடைக்கு போனால், ஒவ்வொன்றும் யானை விலை, குதிரை விலையாக உள்ளது. பொருட்களின் விலைதான் உயருகிறதே தவிர சம்பளம் உயர்ந்தபாடில்லை மக்களுக்கு.
போன வருடம் நூறு ரூபாய்க்கு வாங்கிய சட்டை இப்போது இருநூறு ரூபாய். கேட்டால் கொரோனாவைக் காரணமாகச் சொல்வார்கள். சரி, அவ்வளவு விலை கொடுத்து வாங்குகிற உடையாவது நன்றாக இருக்கிறதா எனப் பார்த்தால், ஏற்கனவே பலமுறை உடுத்தி துவைத்து கிழித்த மாதிரி இருக்கிறது பல ஆடைகள். கேட்டால் பேஷன் என்கிறார்கள்.

இளசுகளுக்கு வேண்டுமானால் இது போன்ற பேஷனான கிழிந்த ஆடைகள் பிடிக்கலாம். ஆனால் காசு கொடுக்கும் அவர்களின் பெற்றோருக்கு இது அதிருப்தி ரகம் தான். இது ஒருபுறம் என்றால், விலைவாசி உயர்வால் கையில் கிடைத்த போனஸ் பணம் முழுவதும் ஆடைக்கும், பட்சணங்களுக்குமே காலியாகி விடுகிறதே என்ற கவலையும் கூட சேர்ந்து விடுகிறது.

Recommended Video
கவலைகளை தீர்த்துக் கொள்ள மீம்ஸ் தானே மருந்து. இதோ தீபாவளி ஸ்பெஷலாக வைரலாகி வரும் சில ஜாலி மீம்ஸ்கள்...












Click it and Unblock the Notifications