மார்கழி குளிர்.. பேரைக் கேட்டாலே உடம்பெல்லாம் சும்மா உதருதுல்ல..!
மார்கழி மாதப் பனியை வைத்து சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: குளிர்காலம் வந்து விட்டாலே சளி, காய்ச்சல், இருமல் போன்றவை இலவச இணைப்பாக தானாக வந்து சேர்ந்து விடும். கொரோனாவையே மீம்ஸ் போட்டு கலாய்ப்பவர்கள் இருமல், சளியை சும்மா விடுவார்களா?
மார்கழி குளிர்.. கேட்டாலே கொஞ்சம் குளிரத்தான் செய்கிறது. இரவுக்கும், பகலுக்கும் கொஞ்சூண்டு வெளிச்சம் மட்டுமே வித்தியாசம். மத்தபடி, பகலில் சூரியனை நேரடியாகப் பார்ப்பதே அதிசயமாகத்தான் இருக்கிறது. மதியம் ஒரு மணிக்கும்கூட குளிர்காற்று அப்படியேத்தான் இருக்கிறது.

பகலிலாவது ஃபேன் போடாமல் சமாளித்துக் கொள்ளலாம் போல.. இரவில் கொசுவுக்கு பயப்பட்டு ஃபேனைப் போட்டால் குளிர் நடுங்க வைத்து விடுகிறது. ஈரக்கையால் யாராவது நம்மைத் தொட்டால், 'புடுச்சு ஜெயில்ல போடுங்க சார்..' என சந்தானம் ரேஞ்சுக்கு கத்த வைத்து விடுகிறது இந்தக் குளிர்.

நமக்கே சொல்ல இவ்வளவு விசயம் இருக்கும் போது, மீமர்கள் மட்டும் குளிரை விட்டு வைப்பார்களா. மார்கழி பனி,குளிர் என விதவிதமான மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.












Click it and Unblock the Notifications