இப்பெல்லாம், சோறு சாப்டியானு கேக்கறவன விட... சாறு குடிச்சியானு கேக்கறவன்தான் அதிகம்!
டெங்கு காய்ச்சல் குறித்து நெட்டிசன்கள் டுவிட்டரில் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
சென்னை: சோறு சாப்பிட்டியானு கேட்பவனை விட சாறு குடிச்சியானு கேட்பவர்தான் அதிகம் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
கடந்த சில நாள்களாக தமிழகத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் பலர் உயிரிழக்க நேரிடுகின்றனர். அரசு நிர்வாகமும் தடுப்பு நடவடிக்கைகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் டெங்கு குறித்த பல்வேறு கருத்துகளை நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.
|
சாறு குடித்தியா
*முன்னெல்லாம் யார பாத்தாலும்...,*
*#சோறு சாப்டியா'னு கேப்பானுங்க*
*இப்ப*
*#சாறு குடிச்சியா'னு கேட்கானுங்க 😂* *#டெங்கு
|
டெங்கு கூட ஒரு செல்பி
#டெங்கு கொசு கூட ஒரு செல்பி த கிரேட் மொமெண்ட்.
|
பயத்துலயே காய்ச்சல்
அட அதிகாரிகளா..வீட்டுல நிம்மதி தூங்கமுடியல,ஒரு கொசு கடிச்சாலும் #டெங்கு வா இருக்குமோனு பயத்துலயே காய்ச்சல் வர வச்சிட்டிங்களே.
|
டெங்குவே மேல்
பட்டாசு வெடித்தால் #டெங்கு வராது- நாராயணன். வாசலில் சாணம் தெளித்தால் டெங்கு வராது - ஓர் அமைச்சர். டெங்குவையே தாங்கி விடலாம் போலிருக்கிறது.
|
நன்றி ஆண்டவரே
அப்பாடா வெடி போட ஆரம்பிச்சிட்டாங்க. இனி #டெங்கு வராது.
கோடான கோடி நன்றி ஆண்டவரே.
|
கடிக்கற கொசு
நம்பிக்கை வைக்கிறது தப்பில்ல ஆனா நம்மை கடிக்கற கொசு டெங்கு பரப்புர கொசு இல்லனு நம்பறதெல்லாம் வேற லெவல்.
|
கொசுவோனு சந்தேகம்
இப்பல்லாம் எறும்பு கடிச்சு தடிச்சா கூட #டெங்கு கொசு கடிச்சிருக்குமோனு பீதீ ஆகுதப்பா #டெங்கு.
|
என்னாத்துக்கு நீட்
என்னதான் இருந்தாலும் #டெங்கு காய்ச்சலுக்கு #நிலவேம்பு_கசாயம் தான்
அப்பறம் என்னாத்துக்கு #நீட்












Click it and Unblock the Notifications