எவ்வளவோ பண்ணிட்டோம்.. இத பண்ண மாட்டோமா.. ரெய்டை வைத்து வெளுக்கும் நெட்டிசன்கள்!
சசிகலாவின் உறவினர்கள் வீடுகளில் ஐடி அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக நெட்டிசன்கள் தங்களுடைய கருத்துகளை டுவிட்டரில் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
சென்னை : சசிகலாவின் உறவினர்கள் வீடுகளில் ஐடி அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருவது குறித்து தினகரன் பாணியில் எவ்வளவோ பன்னிட்டோம்... இத பன்னமாட்டோமா... என்று நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.
ஜெயா டிவி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரி துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நடத்தப்படும் ஒரு ரெய்டு என்று தினகரன் தரப்பினர் கூறுகின்றனர்.
நீண்ட நேரமாக தொடர்ந்து வரும் இந்த ரெய்டு குறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளை டுவிட்டரில் பகிர்ந்துள்ளனர்.
|
1800 பேருடன் சிறப்பு
சசிகலா இல்ல திருமணவிழா 1800 பேர் கொண்ட குழுவுடன் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
|
தூக்கி வெளியே எறிங்க...
ஜெயா டிவி சோதனையின் ஒரு பகுதியா, பழைய தேன்கிண்ணம் சிடி ரெண்டு இருக்கும், அதை தூக்கி வெளிய எறிஞ்சுட்டு வந்துடுங்க ஆபிசர்.
|
தோண்டுங்க பாஸ்
மெரினா சாமதிலையும் எதையாவது ஒளிச்சி வச்சியிருப்பானுங்க...
எதுக்கும் அங்கேயும் ஒரு தோண்டு தோண்டிருங்க பாஸ்...
|
சசிகலா வழக்கு
#TTVDhinakaran இந்த வழக்கை பார்ப்பாரா இல்ல
#சின்னம் பற்றிய வழக்கையா
இல்ல #சசிகலா வழக்கையா.🤔
வாழ்க்கை முழுவதும் வழக்கையே பார்க்க வைச்சுட்டாங்களேயா..😢
(சொந்த வழக்கு வேற..💪)
|
மோடி லெவல்
தமிழிசை லெவல்ல எதிர்த்த #மெர்சல் லே ஹிட் அடிக்கும் போது, #மோடி லெவல்ல எதிர்க்கும் #TTVDhinakaran கண்டிப்பா CM
|
இது என்ன பெரிசு
எவ்வளவோ பன்னிட்டோம்.. இத பன்னமாட்டோமா