'செஞ்சோற்றுக் கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து'...கேப்டனை கலாய்க்கும் மீம்ஸ்கள்
சென்னை: இந்தத் தேர்தலில் பெரிதும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்த்த மக்கள் நலக் கூட்டணி, ஒரு இடத்தில் கூட முன்னிலை பெறவில்லை.
இதுதவிர தொடர்ந்து 2 முறை சட்டமன்றத் தேர்தலில் வென்ற விஜயகாந்த் இந்த முறை டெபாசிட்டையும் இழந்து நிற்கிறார்.
இந்தத் தேர்தலில் விஜயகாந்த் கட்சியின் வாக்கு சதவீதம் முன்னெப்போதும் இல்லாத வகையில் சரிந்து நிற்கிறது. இந்நிலையில் சேராத இடம் சேர்ந்துதான் விஜயகாந்த் தனது வாக்குகளை இழந்து நிற்கிறார் என நெட்டிசென்கள் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
அதிலிருந்து ஒருசில உங்கள் பார்வைக்கு..
|
செஞ்சோற்றுக் கடன் தீர்க்க
செஞ்சோற்றுக் கடன் தீர்க்க கேப்டன் சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்து விட்டார் எனக் கூறுகின்றனர்.

மாற்றம் வேணும்
அதிமுக, திமுக 2 கட்சிகள் மட்டுமே வழக்கம் போல முன்னிலை பெற்றுள்ளன என்பதை சுட்டிக்காட்டி இருக்கின்றனர்.

முதல்வர்
அப்போ நீங்க முதல்வர் இல்லையா? பருத்திவீரன் வசனம் இந்த இடத்தில் நன்றாகப் பொருந்துகிறது.

எப்போ எண்ணுவீங்க
மக்கள் நலக் கூட்டணி ஓட்டு எப்போ எண்ணுவீங்க?
|
ரிசல்ட் பார்க்க
மக்கள் நலக் கூட்டணி முடிவுகள் தெரிந்து விட்டதால் அதனை நேரில் சென்று பார்க்க வேண்டாம் என்று கூறியுள்ளனர்.
|
திருவிளையாடல்
நாம் யாருக்கு என்ன தீங்கு செய்தோம்? அந்த சொக்கநாதன் தம் திருவிளையாடலை நம்மிடம் தான் காட்ட வேண்டுமா? என்று விஜயகாந்தும், பிரேமலதாவும் புலம்புகின்றனராம்.
|
என்ன தம்பி
என்ன தம்பி என்ன ஆச்சி? என்று வைகோ விஜயகாந்தைப் பார்த்துக் கேட்கிறாராம்.
மொத்தத்தில் விஜயகாந்த் தனித்துப் போட்டியிட்டிருந்தால் இந்தளவு மோசமான வாக்குகளைப் பெற்றிருக்க மாட்டார், என்பதே பலரின் ஆதங்கமாக உள்ளது.












Click it and Unblock the Notifications