ஏமாறவும் வேண்டாம்.. ஏமாற்றவும் வேண்டாம்
சென்னை: ஏமாறுவதும் தவறு, ஏமாற்றுவதும் தவறு என்பார்கள். உண்மையில் ஏமாறுவது என்பதை விட ஏமாறும் அளவுக்கு மனசை பலவீனமாக வைத்திருப்பதுதான் பெரிய தவறு. பிறரை நம்பி ஏமாறுவதும் தவறு தான்.
ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே என்பார்கள். நாம் பிறரை ஏமாற்றாமலும் பிறர் நம்மை ஏமாற்றாமல் நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அவன் தான் சிறந்தவன் ஆவான். எப்பொழுதும் நேர்மையான வழியில் செயல்படுங்கள். மற்றவர்களை நீங்கள் ஏமாற்றினால் கிடைக்கும் சந்தோசம் நிரந்தரமானது அல்ல. அவ்வாறு ஏமாற்றினீர்கள் என்றால் அதற்கான பலனை நிச்சயம் அனுபவிப்பீர்கள்.
சில பிள்ளைகள் பெற்றோரை ஏமாற்றி தீய செயல்களில் ஈடுபடுகின்றனர். அது அவர்கள் பெற்றோரை மட்டும் ஏமாற்றவில்லை அவர்களையும் சேர்த்தே ஏமாற்றிக் கொள்கின்றனர். நாம் எப்பொழுதும் மற்றவரை ஏமாற்ற கூடாது. பிறரை ஏமாற்றி வாழும் வாழ்க்கை வெகுகாலம் நிலைக்காது. உங்கள் உடைமைகளையும் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களை யாராவது ஏமாற்றுவது போல தோன்றினால் அவர்களிடமிருந்து முடிந்தவரை தள்ளியே இருங்கள்.
நீங்கள் பிறரிடம் ஏமாறாமால் உங்கள் குடும்பத்தினரையும் உடைமைகளையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள். அதுபோல் நீங்களும் பிறரை ஏமாற்றாதீ்ர்கள். பிறரை ஏமாற்றி சேர்க்கும் செல்வம் நீண்ட நாள் இருக்காது. ஆரம்பத்தில் சுகம் தருவது போல தோன்றினாலும் இறுதியில் துன்பத்தையே தரும். பிறரையும் ஏமாற்றாமல் நீங்களும் ஏமாறாமல் இருப்பதைக் கொண்டு சிறப்பாக வாழுங்கள்.