சிரிச்சே விரட்டுங்க அழுகையை!
எதற்கெடுத்தாலும் சிலர் அழுவார்கள்.. அது அவர்களை தொடர்ந்து பலவீனப்படுத்திக் கொண்டே இருக்கும். மாறாக சிரித்துப் பாருங்களேன்.. சிரிக்கச் சிரிக்க உங்களது பலம் கூடிக் கொண்டே போகும். நீங்கள் முன்பு செய்து வந்த தவறுகள் கூட சரியாகி விடும்.. அந்த மாற்றத்தை அனுபவித்துப் பார்த்தால்தான் புரியும்.
அழுவதால் எந்த பயனும் இல்லை. உடலும் உள்ளமும் மேன்மேலும் சோர்ந்து தான் போகும். ஆனால் சிரிப்பதால் மனதில் உள்ள கவலைகள் நீங்கி உடலும் மனதும் புத்துணர்ச்சியோடு இருக்கும். சிரிப்பதால் மனிதனுடைய ஆயுள் அதிகமாகிறது. மனதில் எப்போதும் கவலைகளுக்கு இடமளிக்காதீர்கள் ஏனென்றால் உங்கள் மனது ஒன்றும் கவலைகள் நிரப்பும் குப்பைத் தொட்டி கிடையாது. உங்கள் மனதை அன்று பூத்த மலரைப் போல புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்.
சிரித்து வாழ வேண்டும் அந்த சிரிப்பு உங்கள் இலக்கை அடைவதற்கான ஒரு உத்வேகத்தை உங்களுக்கு அளிக்கும். மனதில் மகிழ்ச்சி இருப்பவரிடம் முகத்தில் சிரிப்பு இருக்கும். உங்கள் முகத்தில் தோன்றும் சிரிப்பு உங்களை மட்டும் அல் உங்களைச் சுற்றி இருப்பவரையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளும். உங்களுடைய மகிழ்ச்சியை சிரிப்பினால் வெளிப்படுத்துங்கள். அழுது அழுது எதுவும் நடக்கப் போவதில்லை. உங்கள் இலக்கை நீங்கள் வெற்றிகரமாக அடைய வேண்டுமென்றால் அழுவதை விட்டு விட்டு தோல்வியைக் கண்டு சிரியுங்கள்.
வாழ்வில் கவலைகள் ஏற்படும் போது உங்கள் வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்களை நினைத்து சிரியுங்கள். ஒரு நாளைக்கு குறைந்து பத்து நிமிடமாவது சிரிப்பவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதில்லை. உங்கள் சிரிப்பினிலே உங்கள் அழகு வெளிப்படும். சிரிங்க சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க.