குக்கர் பொங்கல் நமக்கெதுக்கு.. உறவுகள் கூடி வைப்போம் மண் அடுப்பில்!
இப்போதெல்லாம் குக்கர் பொங்கல்தான்.. கூட்டமே இல்லாமல் சொந்த பந்தம் இல்லாமல் குடும்பத்துக்குள் முடிந்து விடுகின்றன பட்டணத்து பொங்கல் விழாக்கள்.
ஆனால் கிராமங்களைப் பாருங்கள். உறவுகள் கூடி நட்புகள் கூடி ஊர் கூடி பொது இடத்தில் பொங்கல் வைத்து பல்வேறு விளையாட்டுகள் விளையாடி உற்சாகமாக கொண்டாடுகின்றனர் நம் பாரம்பரிய விழாவை.
அதுதாங்க உண்மையான பொங்கல். அந்த சுவையும், இன்பமும் வேறு எதிலாவது கிடைக்குமா சொல்லுங்க.

கொண்டாட்டம்
பொங்கல் வருகிறது என்றால் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் கொண்டாட்டம் தான். புதிய மண்பானை வாங்கி அலங்கரித்து பொங்கலுக்கு ஒரு வாரம் முன்பே வீட்டைச் சுத்தம் செய்து வெள்ளையடித்து பொங்கலன்று காலையில் வீட்டு வாசலில் சூரிய பகவான் எதிரில் மண்பானையில் பொங்கல் வைப்போம்.

புத்தரிசியில் பொங்கல்
அரிசியும் வெல்லமும் சேர்த்துப் பொங்கலிட்டு இறைவனை குடும்பத்தோடு வழிபடுவோம். ஆனால் இன்றோ குக்கரில் பொங்கல் வைத்து இறைவனுக்கு படைத்து வீட்டிற்குள்ளேயே இருந்து விடுகிறோம். மண்பானையில் பொங்கல் செய்து அது பொங்கி வரும்போது பொங்கலோ பொங்கல் என்று சொல்லும் போது கிடைக்கும் மகிழ்ச்சியே அலாதியானது.

தனி சுவை
பொங்கல் அன்று மண்பானையில் பொங்கலிட்டுப் பாருங்கள் அதன் சுவையே தனி தான். இன்று நாம் பயன்படுத்தும் குக்கரில் அந்த சுவை வராது. நம் சுற்றத்தாரோடு சேர்ந்து மண் பானையில் பொங்கல் செய்து அனைவரும் ஒன்று கூடி சூரியபகவானை வழிபட்டு நன்மை பெறுங்கள். மனசும் ஆத்மாவும் சேர்ந்து சந்தோஷிக்கும்.

தொழுதுண்டு பின் செல்பவர்
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர் என்பதற்கேற்ப ஊருக்கே உணவளிக்கும் உழவர் பெருமக்களைப் போற்றும் வகையில் மண்பானையில் பொங்கல் வைத்து உங்கள் அண்டை வீட்டாருடன் கொண்டாடி மகிழுங்கள்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications