ரகிட ரகிட ரகிட.. உங்க மனசுக்கு நீங்கதாங்க ராஜா!!
நீங்கள் ஏழையாக இருக்கலாம்.. உங்களிடம் காசு பணம் எதுவும் இல்லாமல் இருக்கலாம்.. வசதிகள் குறைவாக இருக்கலாம்.. ஆனால் உங்க மனசுதாங்க அரண்மனை.. அதுக்கு நீங்கதாங்க ராஜா.. !
ஒவ்வொரு மனிதனும் ஒரு ராஜாதான். அவனைப் பொறுத்தவரை அவன்தான் அவனுக்கு ராஜா.. அடுத்தவரிடம் கை கட்டி நிற்க வேண்டி வந்தாலும் கூட அவரவர் மனசுக்கு அவரவர் ராஜாதான்.
உங்களுடைய நல்ல மனசுக்கு நீங்க தான் ராஜா. உங்கள் மனதை ஆட்டுவிப்பவர் நீங்கள் தானே. மனதை விசாலமாக்குங்கள். உங்கள் மனக்கோட்டையில் நீங்கள் தான் ராஜா.
குட்டீஸ்.. இனிமே கதை சொல்ல சொல்லி அப்பா அம்மாவ நச்சு பண்ணாதீங்க..யூட்யூபை கலக்கும் பெட்டைம் ஸ்டோரிஸ்
மனதை செலுத்துங்கள்
உங்கள் இலக்குகளை நோக்கி உங்கள் மனதைச் செலுத்துங்கள். உங்கள் வெற்றிப் பாதையை நோக்கிப் பயணியுங்கள். உங்களால் முடிந்தவரைப் பிறருக்கு நன்மை செய்யுங்கள். நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதைத் தான் உங்கள் மனம் செய்யப் போகிறது. உனக்கென்ன நீ ராஜா மாதிரி இருக்கிறாய் என்பார்கள்.
நற்குணம்
இரக்கமும் நற்குணமும் கொண்ட மனிதனிடம் இறையருள் நிச்சயம் இருக்கும். உங்கள் இலக்குகளை அடைய மனதில் திட்டம் தீட்டி அதன் வழி நடப்பீர்கள். உங்கள் வாழ்க்கைப் பாதையை நீங்கள் தான் தீர்மானிக்கப் போகிறீர்கள். உங்கள் எதிர்காலத்தை நீங்களே முடிவு செய்யுங்கள். கனவுகளை நிஜமாக்கப் பாடுபடுங்கள்.
மனசு தான் ராஜா
காசு பணம் இருந்தால் மட்டும் ராஜாவாகி விட முடியாது. எவன் ஒருவன் பிறருக்குத் தன்னால் இயன்ற உதவிகளை எல்லாச் சூழ்நிலையிலும் செய்கிறானோ அவனே சிறந்த ராஜா தான். தன் கொள்கையை அடைய அயராது பாடுபடுபவனும் ராஜா தான். உங்களுடைய ராஜ்ஜியம் உங்கள் மனம் தான். உங்கள் விருப்பம் போல் அதை ஆட்டி வைக்கலாம்.
உங்களுக்கு நீங்கதான் ராஜா
யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும் ஆனால் உங்கள் மனதிற்கு நீங்க தான் ராஜா. உங்கள் ஆளுமையால் உங்களுடைய செயல்களில் வெற்றி காண்பீர்கள். கம்பீரமாக வெற்றி நடை போடுங்கள். என்றுமே நீங்கள் ராஜா தான். அந்த எண்ணமே உங்களை உயர்வுக்குக் கொண்டு செல்லும்.. உயர்வின் உச்சத்தை எட்டிப் பிடிக்க உதவும்.. முயன்று பாருங்கள் சார்.. முடியாதது என்று எதுவுமே இல்லை.