Monday Motivation: உனக்காக யாரும் செய்ய மாட்டார்கள்!
உனக்காக யாரும் செய்ய மாட்டார்கள்.. நீதான் எப்போதும் உன் வேலைகளைச் செய்ய வேண்டும். இந்த வாக்கியத்தை எப்போதும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் நண்பர்களே.
நமது வேலைகளை நாம்தானே செய்ய வேண்டும். நமக்காக யாராவது வந்து செய்வார்கள் என்று காத்திருந்தால் கடைசி வரை அதை அப்படியேதான் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.

தன் கையே தனக்குதவி என்பார்கள். நம்முடையப் பணிகளை நாம் தான் முடிக்க வேண்டும் மற்றவர்கள் செய்வார்கள் என்று எதிர்ப்பார்க்கக் கூடாது. அலுவலகத்தில் வேலைப் பார்க்கும் போது அங்கிருக்கும் குழாயை நாம் பயன்படுத்தினால் நாம் தான் அதைச் சரியாக மூட வேண்டும்.
இன்னும் சிலர் தங்கள் வீட்டிலேயே தேவையில்லாமல் மின்விசிறி மற்றும் மின்விளக்குகளைப் போட்டுவிட்டுச் சென்றுவிடுவர். அதனால் நம் வீட்டு மின்சாரக் கட்டணம் தானே அதிகரிக்கும். அதனால் நாம் தான் நம் பொறுப்புகளைச் செவ்வனே செய்து முடிக்க வேண்டும்.
காலையில் எழுந்து நம் உடலை எப்படித் தூய்மையாக வைத்துக் கொள்கிறோமோ அதுபோலத்தான் நம் மனதையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.
நம் அலுவலகத்திலும் நமக்குக் கொடுத்த வேலைகளை மற்றவரிடம் கொடுக்காமல் உங்கள் வேலைகளை நீங்களே திறம்படச் செய்யுங்கள். உங்கள் வீட்டிலுள்ள குழந்தைகளையும் சிறுவயது முதலே அவர்களது வேலைகளை அவர்களே செய்யப் பழக்குங்கள். சிலர் குளித்துவிட்டு துண்டை நாற்காலியில் போட்டுச் சென்றுவிடுவர். அவ்வாறு போடாமல் அதை துவைக்கும் இடத்தில் போடுவது நலம்.
எத்தனை நாட்களானாலும் உங்கள் வேலைகளை நீங்கள் தான் செய்ய வேண்டும் யாராவது செய்ய வேண்டும் என்று நினைத்தால் அது கிணற்றில் போட்ட கல் போல அந்த வேலை அப்படியே தான் இருக்கும். உங்கள் பணிகளை நீங்களே செய்யுங்கள் வீட்டிலும் அலுவலகத்திலும் வாழ்விலும் வெற்றி வாகை சூடுங்கள். நாளை நமதே இந்த நாளும் நமதே.












Click it and Unblock the Notifications