யார் நம்பிக்கைக்குரியவர்...?
யாரை நம்பலாம் தெரியுமா.. தன்னம்பிக்கை அதிகம் உள்ளவர்தான் பிறரின் நம்பிக்கைக்கு பாத்திரமாக முடியும். அப்படிப்பட்டவரைத்தான் நாம் நம்பலாம்.. அவர்கள்தான் நம்பிக்கைக்குரியவர்களாக இருக்க முடியும்.
நம்பிக்கைதானே எல்லாம். முதலில் நாம் நம்மை நம்ப வேண்டும். தன்னம்பிக்கை இல்லாத மனிதன் தும்பிக்கை இல்லாத யானை போல.. பலம் இருந்தாலும் தும்பிக்கை இல்லாவிட்டால் என்ன செய்ய முடியும் யானையால். அது போலத்தான் நமக்கும் தன்னம்பிக்கை முதலில் இருக்க வேண்டும். பிறகுதான் எதையும் நம்மால் செய்ய முடியும்.

தன்னம்பிக்கை உள்ள நபர்கள்தான் மற்றவர்களின் திறமைக்கும், அறிவுக்கும் மதிப்பு கொடுப்பார்கள். இப்படிப்பட்டவர்களைத்தான் நாம் தாராளமாக நம்பலாம்.
நம்மை நாமே நம்பவில்லையெனாறால் எந்த ஒரு வெற்றியையும் வாழ்வில் அடைய முடியாது. நீங்கள் சாதனையாளராக வெற்றியாளராக வேண்டும் என்றால் தன்னம்பி்க்கை அவசியம். என்னால் நிச்சயம் வெற்றிப் பெற முடியும் என்ற நம்பிக்கை வேண்டும். எத்தனை முறை தோல்வியைச் சந்தித்தாலும் நிச்சயம் நான் ஒரு நாள் அதில் வெற்றியடைவேன் என்ற நம்பிக்கை வேண்டும்.
வாழ்க்கையே போர்க்களம் என்பார்கள். இந்தக் களத்தில் தன்னம்பிக்கையோடு இருக்கும் மனிதன் கடினமான சூழலையும் எதிர்க்கொண்டு வாழ்வில் வெற்றியடைகிறான். குழந்தைகளுக்கும் சிறுவயதிலேயே உன்னால் முடியும் நீ முயற்சி செய் வெற்றியடைவாய் என்று பிள்ளைகளின் நம்பிக்கையைப் பெற்றோர்கள் வளர்க்க வேண்டும். எந்த ஒரு தொழிலிலும் வெற்றியடைய வேண்டுமெனில் தன்னம்பிக்கை அவசியம்.

இன்று அனைவரும் கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸோடு போராடிக் கொண்டிருக்கிறோம். இந்தப் போராட்டத்திலும் தன்னம்பிக்கை மிகவும் அவசியம். நான் மீண்டு வருவேன் என்ற தன்னம்பிக்கை தான் கொரோனா நோயாளிகளுக்கு வேண்டும். அதுவே அவர்களைப் பாதி குணமாக்கி விடும்.
வீட்டிலிருப்பவர்களும் தன்னம்பிக்கையோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் இந்த நோயிலிருந்து தப்பலாம். உங்கள் மீதுள்ள நம்பிக்கையை மட்டும் எந்த ஒரு சூழலிலும் விட்டுவிடாதீர்கள். வாழ்க்கையில் எது முக்கியமோ இல்லையோ தன்னம்பிக்கை முக்கியம் அமைச்சரே.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications