இதுவல்லவோ மனிதநேயம்... 196 கி.மீ. நடந்தே வந்த கூலி தொழிலாளர்கள்... உதவிபுரிந்த மணப்பாறை போலீஸ்
திருச்சி: வேளாங்கண்ணியில் இருந்து ஒட்டன்சத்திரத்தை நோக்கி நடந்தே வந்த கூலி தொழிலாளர்களை மணப்பாறை காவல்துறையினர் வாகனத்தில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்து உதவினர்.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வெளியூர்களில் தங்கி கூலி வேலை பார்த்து வந்த ஏராளமானோர் கையில் பணமில்லாமல் சொந்த ஊருக்கு செல்ல வழியில்லாமல் தவித்து வருகின்றனர். ஒரு சிலர் குழுவாக இணைந்து நடந்தே சென்று சொந்த ஊரை அடைந்துவிடுகின்றனர்.

அந்த வகையில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை நோக்கி 7 பேர் நடந்து சென்று கொண்டிருந்தனர். வற்றிய தேகமும், வாடிய முகமுமாக அவர்கள் அயர்ந்து வருவதை கண்ட மணப்பாறை போலீஸார் எங்கே செல்கிறீர்கள் எங்கிருந்து இப்படி செல்கிறீர்கள் என விசாரித்திருக்கின்றனர். அதற்கு தாங்கள் வேளாங்கண்ணியில் கூலி வேலை பார்த்து வந்ததாகவும், இப்போது எந்த வேலையும் இல்லாததால் சொந்த ஊருக்கு நடந்து செல்வதாகவும் கூறியுள்ளார்கள்.
மணப்பாறை புறநகரில் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸார் இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்ததுடன், இது குறித்த தகவலை மணப்பாறை டி.எஸ்.பி. குத்தாலிங்கம் மற்றும் காவல் ஆய்வாளர் ஆகியோருக்கு தெரியப்படுத்தியுள்ளனர். அவர்களும் மனிதநேயத்தின் அடிப்படையில் கூலித் தொழிலாளர்களுக்கு உதவிபுரிய முன்வந்தனர். ஏதேனும் ஒரு வாகனத்தில் அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யக் கூறியுள்ளார் மணப்பாறை டி எஸ் பி குத்தாலிங்கம்.
இதையடுத்து சோதனை பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மார்க்கெட்டில் இருந்த லாரியை அழைத்து கூலித்தொழிலாளர்கள் 7 பேரையும் அதில் ஏற்றி சொந்த ஊர்களில் இறக்கிவிட நடவடிக்கை எடுத்தனர்.
வேளாங்கண்ணியில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு 283 கிமீ தொலைவு உள்ள நிலையில் அவர்கள் வேளாங்கண்ணியில் இருந்து மணப்பாறை வரை 196 கிமீ நடந்தே வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications