மறைந்து நூற்றாண்டு கழித்த பிறகும் ஈர்க்கும் நாயகன்.. விவேகானந்தர் ஏன் வீரத்துறவி தெரியுமா?
Recommended Video

சென்னை: இந்தியத் தாய் பெற்றெடுத்த திரு மகன்களில் மிக முக்கியமான ஒருவர் சுவாமி விவேகானந்தர்.
விவேகானந்தரின் ஆற்றல் மிகு தோற்றமே மக்களை கிளர்ந்தெழச் செய்யும். மக்கள் கூட்டங்களை அவர் ஈர்க்கும் திறமையை வேறொருவருக்கு வாய்த்திருக்கவில்லை.
விவேகானந்தர் பல்வேறு சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு ஈர்ப்பு விசையாக இருந்துள்ளார்.

ஆதர்ஷ நாயகன்
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் முதல்கொண்டு யோகி அரவிந்தர் வரையில் பல்வேறு சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு விவேகானந்தர் ஒரு ஆதர்ச நாயகன்.
ரவீந்திரநாத் தாகூர், விவேகானந்தரை ஒரு 'ஜீனியஸ்' என்று அழைக்கிறார். பிரபலமான விஞ்ஞானி ஜகதீஷ் சந்திர போஸ், விவேகானந்தரால் தான், ஈர்க்கப்பட்டதாக தெரிவிக்கிறார்.

அமெரிக்காவில் எழுச்சி உரை
அமெரிக்காவுக்கான இந்தியாவின் முதல் விளம்பர தூதர் விவேகானந்தர்தான் என்று தைரியமாக சொல்லலாம். இந்தியாவின் பண்பாட்டு பெருமைகள் குறித்தும், இந்து மதத்தின் பெருமைகள் குறித்தும் அமெரிக்காவில் விவேகானந்தர் ஆற்றிய எழுச்சிமிக்க உரை, இந்தியர்கள் குறித்தான அமெரிக்கர்களின் பார்வையை மாற்ற உதவியது.

மூட நம்பிக்கையை சாடினார்
விவேகானந்தருக்கு இந்து மதத்தில் நிலவிய சிலமூட நம்பிக்கைகள் மீது நம்பிக்கை கிடையாது. மூட பழக்கவழக்கங்களை விவேகானந்தர் தீவிரமாக எதிர்த்தார். இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வரையறை செய்யும், இந்து தர்மத்தின் எந்த ஒரு வரையறைக்குள்ளும் கட்டுப்படாத மார்டன் சாமியார் விவேகானந்தர். நல்ல கருத்துக்கள் எந்த மதத்தில் இருந்தாலும் அதை எடுத்துக்கொண்டு இந்து மதத்தை பின்பற்றுவோர், அதை பின்பற்ற வேண்டும் என்று சொன்னவர் விவேகானந்தர்.

பக்தி ஒன்றே முக்கியம்
அவர் ஒரு வரையறைக்குள் அடங்காத மரபு சார்பற்ற சாமியாராக தோற்றமளித்தார். புகை பழக்கம் கொண்டவர்கள், அசைவ உணவுகள் சாப்பிடுவோர் குறித்து எந்த வருத்தமும் அவருக்கு கிடையாது. பக்தி என்பதையே விவேகானந்தர் வலியுறுத்தினாரே தவிர, அதற்கான நடைமுறைகளை கிடையாது. பக்தி யோகத்தோடு, கர்ம யோகம் செய்ய கூறியவர் விவேகானந்தர். அதாவது, சும்மா இருத்தல் ஆகாது, பற்று இல்லாமல், இறைவனுக்கு சமர்ப்பணமாக எண்ணி, நமது கடமைகளை செவ்வனே செய்ய வேண்டும் என்பதே கர்ம யோகம்.

காலத்தால் அழியா காவிய நாயகன்
இதனால் தான் இத்தனை வருடங்களுக்குப் பிறகும் கூட இளைஞர்களின் ஆதர்ஷ நாயகனாக இருக்கிறார் சுவாமி விவேகானந்தர். 1902ம் ஆண்டு, ஜூலை 4ம் தேதி மண்ணுலகை விட்டு விண்ணுலகை ஈர்க்க சென்ற சுவாமி விவேகானந்தரின் 116வது நினைவு தினம் இன்று. ஒரு நூற்றாண்டு கடந்தபோதிலும், அவர் இளைஞர்களின் உந்து விசையாக இன்னும் வாழ்ந்து கொண்டுதான் உள்ளார்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications