புத்தாண்டில் வென்று எழுவோம்..!
கொரோனா என்ற பூத அரக்கனிடம் சிக்கி உலகம் சிதைந்த 2வது வருடத்தில் பிறக்கும் தமிழ்ப் புத்தாண்டு இது. இந்த அரக்கனின் சதியாட்டத்தை வென்று மீண்டும் எழுவோம்.. புதுவருடத்தில் சந்தோஷங்கள் பிறக்கட்டும்.. சங்கடங்கள் மறையட்டும்.. ஆரோக்கியம் அதிகரிக்கட்டும்.

புன்னகை பூக்கட்டும் இந்த புத்தாண்டில். புத்தாண்டில் புத்துணர்ச்சியோடு உங்கள் செயல்களில் ஈடுபடுங்கள். தமிழரின் வாழ்வோடு பின்னிப் பிணைந்தது இந்த சித்திரைத் திருநாளில். இந்த நாளில் வாசலில் மாக்கோலமிட்டு வீட்டைச் சுத்தம் செய்து அலங்கரித்து இறைவனை வண்ணப் பூக்களால் அலங்கரித்து இந்த வருடத்தில் என் குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிறைந்து இருக்கட்டும் என்று இறைவனிடம் வேண்டுங்கள்.
உற்றார் உறவினர்களிடம் பேசுங்கள். பிள்ளைகளோடு விளையாடுங்கள். கொரோனா பிடியிலிருந்து இவ்வுலகத்தார் மீண்டு நம் வாழ்வும் இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும் என்று இறைவனிடம் மனமுருக பிரார்த்தியுங்கள். புத்துணர்ச்சியோடு மனதில் உற்சாகத்தோடு இந்த புத்தாண்டில் உங்கள் இலக்குகளை நோக்கி அடியெடுத்து வையுங்கள்.
புத்தாண்டைச் சிறப்பாகக் கொண்டாடுங்கள். இன்றைய தினம் மாங்காய் பச்சடி செய்து அதில் வேப்பம்பூ சிறிது வறுத்துப் போட்டு இறைவனுக்குப் படைப்பர். இறை வழிபாடு செய்யுங்கள். நோய் நொடியின்றி வாழ வேண்டும் எல்லோர்க்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என வேண்டுவோம்.
புத்தாண்டில் புன்னகை மலரட்டும். புத்தாண்டை மகிழ்ச்சியாகக் கொண்டாடுங்கள். அனைவர் வாழ்விலும் இன்பம் பொங்கட்டும். அனைவருக்கும் இனிய பிலவ புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.












Click it and Unblock the Notifications