வீட்டுக் காவலில் இருந்து ஸாவோ சியாங்கை விடுவிக்க சீனா முடிவு
ஹாங்காங்: கம்யூனிஸ்ட் தலைவர் ஸாவோ ஸியாங்கை வீட்டுக் காவலில் இருந்து விடுதலை செய்ய சீன அரசு டிவு செய்துள்ளது. இத் தகவலை, ஹாங்காங் நிாளிதழ் தெவித்துள்ளது.
1989-ம் ஆண்டு சீனாவில் தியானன்மென் சதுக்கத்தில் நிடந்த படுகொலைச் சம்பவத்தை அடுத்து ஸாவோ ஸியாங் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஸியாங் வீட்டுக்குக் காவலாக இருந்த போலீஸார் அனைவரும் விலக்கப்பட்டு விட்டனர். அவரது வீட்டுக் காவல் விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு அவரை, சீன நிாடாளுமன்றத் தலைவர் வான் லி மற்றும் ன்னாள் பாதுகாப்பு அமைச்சர் சாங் அய்பிங் ஆகியோர் சந்தித்துப் பேசினர் என்று அப் பத்திகையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இது பற்றிய சீன அரசிடமிருந்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
சீனாவின் சிறந்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவராக விளங்கிய ஸியாங் கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு, போராட்டம் நிடத்தி வந்த மாணவர்களுடன் சேர்ந்து தியானன்மென் சதுக்கத்துக்குள் நுழைந்து பல மாதங்கள் அங்கு போராட்டம் நிடத்தினார்.
மாணவர் போராட்டத்தை அடக்க ராணுவம் வரவழைக்கப்பட்டது. ராணுவம் நிடத்திய தாக்குதலில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இறந்தனர்.
ராய்டர்ஸ்.