வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
27 ஆண்டுகளாக வாய் திறக்க டியாமல் அவதிப்பட்டவருக்கு நவாரணம் அளித்த மதுரை டாக்டர்கள்
மதுரை:
2 7 ஆண்டுகளாக வாய் திறக்க டியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்த இளைஞருக்கு வாயில் அறுவைச் சிகிச்சை செய்து அவரது பிரச்சினைக்குத் தீர்வு கண்டுள்ளனர் மதுரை டாக்டர்கள்.
மதுரை அருகே பேரையூர் பகுதியைச் சேர்ந்தவர் துரைப் பாண்டி. இவருக்கு வயது 28. துரைப்பாண்டிக்கு Ankylosis Of The Termpero Mandibular Joint என்ற மருத்துவக் குறைபாடு இருந்தது. இதனால் அவரால் கடந்த 27 ஆண்டுகளாக வாயைத் திறக்க டியவில்லை.
வாயின் கீழ் தாடை, மண்டை ஓட்டின் அடிப்பாகத்துடன் ஒட்டிக் கொள்வதாள் இந்தப் பிரச்சினை உருவாகும். இதனால் வாயைத் திறக்க டியாது. மேலும் திடமான உணவுப் பொருட்களைச் சாப்பிட டியாது. நிாவையும் அசைக்க டியாது.
சிறு வயதில் உருவாகும் இந்தப் பிரச்சினைக்கு ஒரே வழி அறுவைச் சிகிச்சை செய்வதுதான். ஆனால் இந்த அறுவைச் சிகிச்சை மிகவும் ஆபத்தானது. மண்டை ஓட்டின் கீழ் பகுதியில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வாய்ப்பும் உள்ளது.
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் டாக்டர்கள் குழு ஒன்று இந்தக் கடினமான அறுவைச் சிகிச்சையை சமீபத்தில் வெற்றிகரமாக செய்து டித்தது. தற்போது பாண்டி நிலமாக உள்ளார். எல்லோரையும் போல அவரால் சாப்பிட, பேச டிகிறது.
யு.என்.ஐ.