வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
விபத்தில் சிக்கியது தில்லி-லாகூர் பஸ்
அம்பாலா:
லாகூலிருந்து, டெல்லி வந்த பாகிஸ்தான் அரசுப் பேருந்து, அம்பாலா அருகே ஜி.டி. சாலையில் விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக இதில் யாரும் காயம் அடையவில்லை.
விபத்தில் சிக்கிய பஸ்சில் 37 பயணிகள் இருந்தனர். இவர்களில் 16 பேர் இந்தியர்கள், 18 பாகிஸ்தானியர்கள், ஒரு இங்கிலாந்துக்காரர், இரண்டு பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள்.
ஜி.டி.சாலையில், ராணுவ ஆளெடுப்பு மையத்திற்கு அருகே இந்த விபத்து நிடந்தது. சாலையில் வந்து கொண்டிருந்த டிராக்டருடன் பஸ் மோதியதில் பஸ்சின் ஒரு பகுதி சேதமடைந்தது. கரும்புகளை ஏற்றிக் கொண்டு அந்த டிராக்டர் வந்து கொண்டிருந்தது
விபத்து குறித்து அறிந்ததும், காவல்துறை உயர் அதிகாகள், துணை மாஜிஸ்திரேட் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
விபத்து குறித்து பஸ்சின் மக்கள் தொடர்பு அதிகா ஜோசப் அகஸ்டின் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
இந்த பஸ் சில வாரங்களாகவே பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. சமீபத்தில் இந்த பஸ் மீது சண்டீகல் தாக்குதல் நிடந்தது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications