வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ரேஷன் உணவுப் பொருட்கள் விலை ஏற்றம் நயாயமானதுதான் - மக்களவையில் அமைச்சர் தகவல்
புது தில்லி:
வறுமைக் கோட்டுக்குக் கீழேயும், வறுமைக் கோட்டுக்கு மேலேயும் வசிக்கும் மக்களுக்கு பொது விநயோக றையின் கீழ் வழங்கப்படும் உணவுப் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டது நயாயமானதுதான் என்று மத்திய நுகர்வோர் விவகாரம் மற்றும் பொதுவிநயோகத் துறை அமைச்சர் சாந்த குமார் தெவித்தார்.
பொது பட்ஜெட் மீது மக்களவையில் புதன்கிழமை நிடைபெற்ற விவாதத்தில் அவர் குறுக்கிட்டுப் பேசியதாவது:
உணவுப் பொருட்கள் மீதான மான்யத்தை ஒழுங்குபடுத்தவே பொது விநயோக றையில் விநயோகிக்கப்படும் உணவுப் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. விலை உயர்த்தப்படவில்லை என்றால் உணவுப் பொருட்கள் மீது வழங்கப்படும் மான்யத்தின் அளவு ஆண்டுக்கு ரூ.5240 கோடியிலிருந்து ரூ.7600 கோடியாக அதிகக்கும். உணவுப் பொருட்கள் விலை உயர்த்தப்பட்ட அதே நிேரத்தில், பொது விநயோக றையில் வழங்கப்படும் உணவுப் பொருட்களின் அளவு மாதம் 10 கிலோவிலிருந்து 20 கிலோவாக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசின் நிடவடிக்கையால், ஒவ்வொரு குடும்பத்துக்கும் உணவுக்காக மாதம் ஆகும் செலவு ரூ.635-லிருந்து ரூ.598 ஆக குறைந்துள்ளது.
சர்க்கரை இறக்குமதி மீது 60 சதவீதம் சுங்கவ விதிக்கப்பட்டுள்ளதும் நயாமானதுதான். பிரச்சினையில் உள்ள சர்க்கரைத் தொழிலின் நதி நலைமை மேம்படுத்தவும், பாகிஸ்தானிலிருந்து தேவையில்லாமல் சர்க்கரை இறக்குமதி செய்வதைத் தடுக்கவும் இந் நிடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது மத்திய அரசின் கையிருப்பில் போதுமான உணவுப் பொருட்கள் உள்ளன என்றார் சாந்த குமார்.
யு.என்.ஐ.