வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ஜெருசேலமில் போப் ஆண்டவர்
ஜெருசேலம்:
வரலாற்றுச் சிறப்புமிக்க இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள போப் ஆண்டவர், ஜெருசேலத்தில் உள்ள ஸ்லீம்களின் மதத் தலைவரை ஞாயிற்றுக்கிழமை சந்தித்தார்.
இஸ்ரேலும், பாலஸ்தீனம் ஜெருசேலம் தங்களுக்குத்தான் சொந்தம் என்று கூறி வருகின்றன. சர்ச்சைக்கிடமான ஜெருசேலத்தில், ஸ்லீம் மதத் தலைவர் இக்மா சபயை, போப் ஆண்டவர் சந்தித்துப் பேசினார். அல்-ஹார்ம் அல்-ஷெப் வளாகத்தில் இந்த சந்திப்பு நிடந்தது.
போப் வருகையை இஸ்ரேலுக்கு எதிரான தங்களது எதிர்ப்பைக் காட்ட பாலஸ்தீனர்கள் பயன்படுத்திக் கொண்டனர். பாலஸ்தீனர்கள் வசம் உள்ள கிழக்கு ஜெருசேலமில், போப்பை வரவேற்று தோரணங்கள், பேனர்கள் கட்டப்பட்டிருந்தன. போப் எங்களுடன்தான் என்ற வாசகங்கள் அதில் இடம்பெற்றிருந்தன. ஒலிபெருக்கிகள் லம் இந்த கோஷத்தை பல பாலஸ்தீனர்கள் எழுப்பிக் கொண்டிருந்தனர்.
ன்னதாக போப்புடனான சந்திப்பு குறித்து சப சனிக்கிழமை கூறுகையில், இஸ்ரேல் பாலஸ்தீனப் பிரச்சினைக்கு விரைவான தீர்வு காண உதவ வேண்டும் என்று போப்பைக் கேட்டுக் கொள்ளப் போவதாக கூறியிருந்தார். மேலும், கிழக்கு ஜெருசேலம் அரபுப் பகுதி. பாலஸ்தீனர்களின் தலைநிகரம் அதுதான் என்று போப்பிடம் கூறப் போவதாகவும் அவர் தெவித்திருந்தர்.
போப் வருகையையொட்டி, ஜெருசேலம் நிகல் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட நிகன் போக்குவரத்தே நறுத்தப்பட்டிருந்தது. குறுகிய சாலைகள் மற்றும் தெருக்கள் டப்பட்டிருந்தன. அங்கு பொதுமக்கள் நிடமாடக் கூட தடை விதிக்கப்பட்டிருந்தது. இது சுற்றுலா வந்திருந்தவர்களுக்கும், பாலஸ்தீனியர்களுக்கும் பெரும் அதிருப்தியைக் கொடுத்தன.
ஜெருசேலமில் உள்ல வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த, யூதர்களின் புனித இடமான மேற்கு சுவர் பகுதிக்கும் போப் செல்கிறார். இங்குதான் யூதர்களின் புனித பேராலயம் உள்ளது. 4-வது நூற்றாண்டில் கட்டப்பட்டது இந்த பேராலயம். இயேசு கிறிஸ்து இங்குதான் சிலுவையில் அறையப்பட்டார். பின்னர் இங்குதான் அவர் புதைக்கப்பட்டார். போப்பின் ஒருவார கால புனிதப் பயணம் இந்த பேராலயத்தில் நறைவடைகிறது.












Click it and Unblock the Notifications