வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ராமதாஸ் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்த வன்னியர் சங்கம் கோரிக்கை
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது வருமானத்தையும் மீறி சேர்த்துள்ள சொத்துக்கள் குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று வன்னியர் சங்கத் தலைவர் ஏ.கே.நடராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.
செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் பேசுகையில், திமுக சட்டப்பேரவை உறுப்பினர் தூத்துக்குடி பெரியசாமி அளவுக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்தது குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதேபோல, பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் சேர்த்துள்ள சொத்துக்கள் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும்.
கடந்த ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி என் மீது பா.ம.க.வினர் நடத்திய தாக்குதல் தொடர்பாக ராமதாஸ் மீதும், அவரது ஆதரவாளர்கள் மீதும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது கண்டிக்கத்தக்கது என்றார் அவர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications