வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
அரசியலமைப்புச் சட்ட மறுஆய்வு: குடியரசுத் தலைவர் நாராயணன்-பிரமதர் வாஜ்பாய் இடையே கருத்து வேறுபாடு இல்லை - சட்ட அமைச்சர் ராம் ஜேத்மலானி
மும்பை:
அரசியலமைப்புச் சட்டத்தை மறுஆய்வு செய்வது தொடர்பாக குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணனுக்கும், பிரதமர் வாஜ்பாயிக்கும் எந்த விதமான கருத்து வேறுபாடும் இல்லை என்று மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் ராம் ஜேத்மலானி தெரிவித்தார்.
மும்பையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிருபர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:
அரசியலமைப்புச் சட்டத்தை மறுஆய்வு செய்வது தொடர்பாக குடியரசுத் தலைவர், பிரதமர் இடையே எந்தவிதமான கருத்து வேறுபாடும் இல்லை. அரசியலமைப்புச் சட்டத்தை மறுஆய்வு செய்வது என்பது அரசியலமைப்புச் சட்டத்தையே முழுவதுமாக மாற்றுவது என்பது அர்த்தமாகாது. தற்போதைய அரசியலமைப்புச் சட்டம் 50 ஆண்டுகள் பழமையானது. ஆகவே, அதில் திருத்தம் செய்யவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
இதற்கு முன் ஆட்சியில் இருந்த அரசுகள் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தனவே தவிர, மறுஆய்வு செய்யவில்லை. அரசியலமைப்புச் சட்டத்தை மறுஆய்வு செய்துவது தொடர்பாக, மத்திய அரசிடம் மறைமுகமான திட்டம் ஏதும் இல்லை. அதேபோல், குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மாற்று ஆட்சி கொண்டு வரப்படுமா என்ற கேள்விக்கும் மத்திய அரசிடம் பதில் இல்லை. அரசிலமைப்புச் சட்டத்தை மறுஆய்வு செய்வது தொடர்பாக அமைக்கப்பட்ட மறுஆய்வு கமிஷனின் பரிந்துரையில் மேற்கண்டவை தொடர்பாக எந்த யோசனையும் தெரிவிக்கப்படவில்ல என்றார் ராம் ஜேத்மலானி.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications