For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

கிளிண்டனின் வருகை இந்தியா-பாக். பிரச்சினைகளைத் தீர்க்கும்: முஷாராஃப்

கோலாலம்பூர்:

அமெரிக்க அதிபர் கிளிண்டனின் வருகை, காஷ்மீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உதவும் என்று பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பெர்வேஸ் முஷாராஃப் கூறினார்.

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் சுதந்திரம் கிடைத்த பின் காஷ்மீர் எல்லைப் பிரச்சனையைத் தீர்ப்பதற்காகப் போராடி வருகின்றன. ஆனால் இன்னும் இப்பிரச்சினை தீர்ந்தபாடில்லை. மூன்று முறை இருநாடுகளும் போரிட்டு விட்டன.

இந்த சமயத்தில் கிளிண்டனின் இந்தியா, பாகிஸ்தான் வருகை கண்டிப்பாய் இப்பிரச்சினையைச் சுமூகமான முறையில் தீர்த்து வைக்கும் என்று நான் நம்புகிறேன்.

காஷ்மீர் பிரச்சனையை தீர்ப்பதற்காக நான் எந்த சமயம், எந்த இடத்திலும் இந்திய உயர் அதிகாரிகளைச் சந்திக்கத் தயாராக இருக்கிறேன்.அமெரிக்க அதிபர் கிளிண்டன் பாகிஸ்தானில் சுமார் 5 மணி நேரம் செலவழித்தார். எல்லைப் பகுதியில் பதட்டம் ஏற்பட்டால் அதற்கு அமெரிக்க ராணுவ வீரர்களை உதவிக்கு அனுப்புவதாகவும் அவர் உறுதி கூறினார்.

இந்தியா - பாகிஸ்தானுக்கிடையே உள்ள காஷ்மீர் பிரச்சினையைச் சுமூகமாகத் தீர்த்து வைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார் என்றார் முஷாராஃப்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X