வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
எய்ட்ஸ் நோய்க்கு சித்த மருத்துவத்தில் மருந்து: தமிழக அரசு திட்டம்
சென்னை:
எய்ட்ஸ் நோய்க்கு சித்த மருத்துவத்தின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மருந்தின் குணங்களை அறிவியல்பூர்வமாக நிரூபிக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. இம்முயற்சி வெற்றி பெற்றால் எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடித்த பெருமை தமிழகத்தைச் சாரும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி தெரிவித்தார்.
சட்டசபையில் புதன்கிழமை நடந்த கேள்வி நேரத்தில் நடந்த விவாதம் குறித்த விபரம் வருமாறு
குமாரதாஸ் (த.மா.கா.): பழமைமிக்க மூலிகை குணங்கள் கொண்ட மஞ்சள், வேம்பு, பூண்டு போன்ற பொருட்களுக்கு காப்புரிமை (பேடன்ட்) பெற அமெரிக்கா முனைந்துள்ளது. சித்த மருத்துவத்தில் நாம் பயன்படுத்தும் பொருட்களுக்கு இதுபோல் உரிமை பெற அரசு முயற்சிக்குமா?
அமைச்சர் ஆற்காடு வீராச்சாமி: தனிப்பட்ட சிலர் காப்புரிமை (பேடன்ட்) பெற கோரிய போது அதை அரசு அனுமதிக்கவில்லை. எனவே அமெரிக்காவுக்கு அனுமதி கிடைக்கும் வகையில் அரசு நடந்து கொள்ளாது. சித்த மருத்துவத்தில் நாம் பயன்படுத்தும் பொருட்களுக்கு காப்புரிமை பெறுவது பற்றி மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்படும்.
டி.மணி (மார்க்சிஸ்ட்): சித்த மருத்துவ முறை அதிகமுள்ள பகுதிகளில் மூலிகைப் பண்ணை அமைக்கப்படுமா?
அமைச்சர்: ஏற்கனவே இதற்கான ஆய்வுகள் நடந்து வருகின்றன.
தாமரைக்கனி (அதிமுக) மூலிகை மூலம் பெட்ரோல் தயாரிக்கமுடியுமா? முடியாதா?
அமைச்சர்: மூலிகை மூலம் பெட்ரோல் தயாரித்தவர் சிறையில் இருக்கிறார். எனவே அந்த முயற்சியில் தாமரைக்கனி ஈடுபடவேண்டாம்.
டாக்டர் ராமன்: சித்த மருத்துவத்தின் மூலம் எய்ட்ஸ் நோய்க்கு சென்னை தாம்பரத்தில் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதே. அந்த மருந்துக்கு என்ன உரிமை பெறப்பட்டுள்ளது?
அமைச்சர்: அந்த மருந்தை அறிவியல்பூர்வமாக நிரூபிக்க வேண்டும் என்று கூறுகின்றனர். எனவே அந்த முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது. இப்பொறுப்பு எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நிரூபிக்கப்பட்டால் எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்ட பெருமை தமிழகத்தைச் சேரும்.












Click it and Unblock the Notifications